Wednesday, August 2, 2017

சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் 21வது நினைவுப் பேருரை - கட்டடக்கலைஞர் சி.அஞ்சலேந்திரன்

சுவாமி விபுலானந்தர் இலக்கிய விமர்சகர், பேராசிரியர், கவிஞர், ஆசிரியர், துறவி என்பவைகளுக்கும் அப்பால் அவர் கிழக்கிலங்கையில் இந்து மறுமலர்ச்சியை 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 1948 வரை முன்னெடுத்தார் என கட்டடக் கலைஞர் சி.அஞ்சலேந்திரன் தெரிவித்தார்.



சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் 125 வது நினைவு தினவிழா மற்றும் 21வது நினைவுப் பேருரை புதன்கிழமை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அவர் ஆற்றிய நினைவுப் பேருரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

நினைவுப் பேருரை - எனது பணிகள் சுவாமியின் சமூக மறுமலர்ச்சிப் பணிகளோடு  ஒத்துப்போகிறது. ஏனென்றால் பொதுவாகக் கருதப்படுவதுபோல் செல்வந்தர்களின் அதிகார எல்லைக்குள் முடக்கியிருந்த கட்டடக்கலையை மீட்டு சாதாரண மக்களுக்கு, குறிப்பாக  ஏழைகளுக்கும் பயன்தரவல்லதாக மாற்ற முயல்கின்றேன்.

அண்மையில் ஐரோப்பாவில் ஆறுவார விடுமுறை காலத்தில், நெதர்லாந்தில் நீண்ட புகையிரதப் பிரயாணத்தின்போது பாட்குலாம் ஆலிகான் பாடிய ராக்ஹமிர் என்னும் கீதத்தைக் (கர்நாடாக இசையில் அது ஹமிர்கல்யாணி என அறியப்படுகின்றது) கேட்டேன். அது எனது ஐ-பாட்டில் உள்ள எம். எஸ். சுப்புலட்சுமி முதல் ஏ. ஆர். ரஹ்மான் வரை பாடிய, எனக்கு மிக விருப்பமான ராக்யாமன் கல்யாணியின் வேறுபட்ட வடிவங்களாகும். எல்லா அழகுகளையும் கண்டு கொண்டிருந்த போதும் குறித்த ஒன்றிலிருந்துதான் உயிர்த்தெழ முடியும். ஒருவன் தான் எவ்விடத்திற்கு உரியவன் என்பதையும் தன்னைத்தான் அறிந்து கொள்வதையும் நல்ல தொடக்கமாக கொள்ள முடியும்.

எனது கலைக்கூட செயற்பாடு

இன்று மூன்று தொடக்கம் நான்கு உதவியாளர்களுடன் இயங்கும் ஒரு கலைக்கூடமாக உள்ளது. 26 ஆண்டுகளுக்கு முன்பு கட்டடக்கலை செயற்பாடுகளை எனது தாயின் வீட்டு விறாந்தையில் இருந்து மேற்கொண்டேன். எனது அலுவலகம் ஒவ்வொரு நாளும் சுருட்டிக் கொண்டு போகக் கூடியதாக இருந்தது.
இப்போது அது எனது சொந்த வீட்டு விறாந்தையிலிருந்து இயங்குகின்றது. எனது போக்குவரத்து ஒரு முச்சக்கரவண்டியில் நடக்கிறது. லண்டனில் எனது பட்டப்பின்படிப்பை முடித்துக் கொண்டு 40 வருடங்களுக்கு முன்னர் நாடுதிரும்பினேன். அப்படிப்பு  எனக்கு வாழ்க்கை பற்றிய பொது மதிப்பைத் தந்தது. இருந்தபோதிலும் நான் நடைமுறை கட்டடக்கலையை இலங்கையின் தலைசிறந்த கட்டக்கலை விற்பன்னரான யோஃபெரிபாவாவிடம் இருந்து பயின்று கொண்டேன். குரு – சிஷ்ய முறையில் வாரத்திற்கு நாற்பது மணித்தியாலயம் என்ற அளவில் 10 ஆண்டுகள் அவரிடம் பயிற்சி பெற்றேன். இக்காலத்தில் நான் வேதனமெதுவும் பெற்றுக் கொள்ளவில்லை.

கட்டடக்கலையின் முதன்மையான கேள்வி

நான் நாட்டுக்கு வந்தவுடன் இலங்கை கட்டடக்கலை தொடர்ச்சியானதா, பாரம்பரியமானதா அமைவில் இது நவீன வாழ்க்கை முறைகளையும் விருப்பங்களையும் எற்கத் தயாரா உள்ளதா? என்ற கேள்வி என்னை எதிர்கொண்டது. எனக்கு விருப்பமான மத்திய கால, மிகுந்தலை தோட்டமான கலுடிய பொக்குன (கறுத்த நீர்தடாகம்) இயற்கையோடு இசைந்து வழமையான ஒழுங்கையும் வெளிகளையும் கொண்டிருக்கிறது. பாரம்பரியத்தின் இயக்கம் மற்றும் நவீனம் என்பவைகள் உயிர்த்துடிப்புடன் இயைந்து யோஃபெரிபாவாவின் பல்வகைப்பாணிகளில் இழையோடியுள்ளமையை காணலாம்.

இருந்த போதிலும் இந்த முக்கிய அம்சம், தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர், மலை நகரான கண்டி திரித்துவக் கல்லூரியின் துணை அதிபராக இருந்த கண்டோர் அவர்களால் 'சிங்களவர்களுக்கான ஆராதனை கூட்டம்' ஒன்றை கூட்டும்போது முன்னெடுக்கப்பட்டது. இந்துப்பாரம்பரியத்துக்கும் நவீனத்துக்குமான தொடர்பை நான் 40 களில் அன்ருபோயட், 50 களில் மினைற்றேசில்வா (யாரும் சிந்திக்காத காலத்தில் அவர் பிராந்திய நவீன கட்டடக்கலை பற்றி சிந்தித்தார்) 60 களின் உல்ரிக் பிளேஸ்னரின் மற்றும் யோஃபெரிபாவாவின் எழுத்துக்களிலும் பணிகளிலும் மேலும் அறிந்து கொண்டேன். உல்ரிக் பினேஸ்னருக்கு கட்டடக்கலையானது பயன்பாட்டுத்தன்மையும் 'ஆன்மாவுக்கான வீடாகவும்' உள்ளது.

60 களில் நடைமுறையில் இருந்த கடும் அரசியல் கொள்கை காரணமாக வெளிநாட்டுப் பொருள்களுக்கும் வெளிநாட்டுப் பிரயாணங்களுக்கும் தடைவிதித்தமையாளது உல்ரிக் பிளேஸ்னரினதும் யோஃபெரிபாவாவினதும் கட்டடக்கலையை செழிக்க வைத்தது. கட்டடக்கலையோடு ஒத்த துறைகளான பார்பராசன்சோனியின் வண்ணப்புடவை கைத்தறி நெசவுஇ மற்றம் எனடி சில்வாவின் உயிர்த்துடிப்புடைய பற்றிக்துணி உற்பத்தியையும் மற்றும் லக்கினேலூக்காவின் கட்டட நகலெடுப்பு கலைபோன்றவற்றையும் விளக்குவித்தது. அன்றுபோயட்டை தவிர எனது பெருமதிப்பு மேலே சொல்லப்பட்டவர்களுக்கு உரியதாகும். அவர்கள் இந்த அத்திவாரத்தில் நின்று அசாதாரணமான காரியங்களைப் புரிந்திருக்கிறார்கள்.

யோஃபெரிபாவாவின் கட்டடக்கலை

சமகால தென்னாசியாவின் தலைசிறந்த கட்டடக்கலை வல்லுநர்களில் ஒருவராக கருதப்படுவர். யோஃபெரிபாவா என்பது ஒருண்மையான கூற்றாகும்.  மேற்குலகின் கட்டடக்கலை ஒரு வெளித்தெரியும் பொருளாகும். ஆனால் பாவாவின் கட்டடக்கலை இத்தகையதல்ல. ஹவுஸ் ஒவ் த ரெட் கிளிவ் இல் மைல்கேல் ஒண்டாச்சி விபரித்துள்ளதின்படி 'அது வடிவமற்ற உலகின் வடிவமாகும்'. பாவா தனது பணியை பெந்தோட்டை லுணுகங்காவில் உள்ள தனது தோட்டத்தில் தோட்டக்கலைஞராகத் தொடங்கினார். தோட்டங்களையே கட்டட பொருளாக உபயோகித்து அவர் கட்டடங்களை வடிவமைத்தார் என்று கூட ஒருவர் சொல்லக்கூடும். ஆதனால் வெளி, வெளித்தோற்றம்;, எதிர்பாரா திருப்பங்கள் கொண்டதாக தோட்டங்களை ஆக்கினார். எளிமையாகச் சொன்னால் பாவாவுக்கு ஒரு கட்டடத்தை வடிவமைப்பதென்பது ஒரு தோட்டத்தை தோட்டத்துக்குள் உருவாக்குவதாகும். அந்தவகையில் பாபாவாவின் கட்டடக்கலை தனித்துவமானது.

கட்டடக்கலையில் என்ன முக்கியமானது

நாளாந்த வாழ்வின் முரண்பாடுகளைஇ பிரதானமாக குறை அபிவிருத்தி மற்றும் வன்செயல்களை வெளிக்காட்டும் மற்றக்கலைகளைப் போல் அல்லாமல், துரதிஷ்டமாக கட்டடக்கலை வாழ்க்கையை கொண்டாடுவதாக இருக்கின்றது. மிகவும் கடுமையான வெளித்தோற்றம் மாத்திரம் கொண்ட இன்ப உணர்வற்ற நிலப்பரப்பில் வரண்டு தெரியும் கட்டுமானங்களைக் கண்டு நான் மனவருத்தமடைகின்றேன். இந்தப் பொது நியதியை ஏற்றுக்கொண்டு ஒருவர்; உணர்வுéர்வமாக, திகைப்பில்லாமல், சிக்கனமாக நாளாந்த வாழ்வுக்குரிய கட்டடக்கலையை சன்னாடஸ்வத்த விபரித்துள்ளபடி தெரிவு செய்ய வேண்டும்.  அவர் கூறுகிறார் 'ஒவ்வொரு செயற்பாடும் அழகியல் அம்சங்களை கொண்டிருக்க வேண்டும்' அந்தவகையில் இலங்கை கட்டடக்கலைக்கு எனது பங்களிப்பு அது அழகியல் அம்சங்களை கொண்டிருக்க வேண்டும் என்பதை உயர்தொழில் புரியும் மத்தியதர வகுப்பு, தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் மற்றும் அனாதை இல்லங்களை கட்டும் நிறுவனங்கள் மட்டத்தில் வலியுறுத்தியதாகும்.

நான் இங்கே படாடோபமில்லாத கவனத்தை ஈர்க்காத வட்டார பாணி கட்டடங்களைக் கண்டேன். அது பொதுமக்களிடையே அதிகம் புழக்கத்தில் இருந்ததாகும். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைவது சிறிய இளைப்பாறும் மண்டபங்கள் அல்லது குருநாகலில் கலகவெதரவில் உள்ளது போன்ற அம்பலங்களாகும். இந்த அம்பலம் நெல்வயல்களைப்  பார்த்தபடி அவைகளின் ஓரத்தில் தட்டையான பாறையில் நான்கு தூண்களை நிறுத்தி அமைக்கப்பட்டுள்ளது. இது பரிéரணமாக எனது கட்டடக்கலை எண்ணங்களைப் பிரதிபலிப்பதால் நான் அவைகளில் ஒரு நெருக்கத்ததை உணர்கிறேன்.
 இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆசியக்கலைகளின் முடிவான நோக்கம் கடவுளின் நிலையை அடைவதென்று மேற்கிற்கும் கிழக்கிற்கும் விளக்கினார். ஆனந்த குமாரசாமி துயரமும் துன்பமும் இடைக்கிடை கொண்டு வெளிப்புகளும் நிகழும். இலங்கைக்கு அது ஒரு தியான புகலிடத்தை வழங்கினாலே அது எனக்கு போதுமானது.


முடிவுரை

விரைவாக மாறிக்கொண்டிருக்கும் அலைபேசி மற்றும் இணயங்களின் காலத்தில் நிரந்தமான கட்டடக்கலை உள்ளதா என்ற கேள்வி என்னிடம் எழுப்பப்படுகின்றது. எனது பதில் தேடிக்கொண்டிரு, வர்த்தக நோக்கத்துக்காக தடம் மாறாதே (பிழையான சட்டங்கள் தான் முக்கிய காரணம்) எனது பிரதேசத்தின் வரலாற்றை அறிந்து, பெருமிதம் கொண்டு சாதனைபுரி என்பதாகும். 
http://thamildomain.com/article/433