Showing posts with label கட்டடக் கலைஞர் சி.அஞ்சலேந்திரன். Show all posts
Showing posts with label கட்டடக் கலைஞர் சி.அஞ்சலேந்திரன். Show all posts

Monday, May 16, 2022

கட்டடக்கலலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்!


 அண்மையில் 'Kälam / Tradition & Heritage /C.Anjalendran / The Architecture of the Tamil Hindus of Sri Lanka' என்னும் தலைப்பிடப்பட்ட , இலங்கைக் கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனுடான நேர்காணலை உள்ளடக்கிய காணொளியொன்றினைப் பார்த்தேன். அதில் அவர் தெரிவித்துள்ள கருத்துகள் சிலவற்றைப்பற்றிய என் கருத்துகளின் பதிவிது. காணொளிக்கான இணைப்பினை இப்பதிவின் இறுதியில் தந்துள்ளேன்.


முன்னாள் வவுனியா பா.உ சி.சுந்தரலிங்கத்தின் பேரனும் , கட்டடக்கலைஞருமான அஞ்சலேந்திரனின் உரையிது. அஞ்சலேந்திரன் புகழ்பெற்ற இலங்கை, தெற்காசியக் கட்டடக்கலைஞர்களிலொருவர். இங்குள்ள காணொளியில் அஞ்சலேந்திரன் இந்துக் கட்டடக்கலை பற்றிக் கூறிய கருத்துகளிலிருந்து அவருக்கு இந்துக்கட்டடக்கலை பற்றி மேலோட்டமான புரிதல்தான் உள்ளதோ என்று சந்தேகப்படுகின்றேன். உதாரணத்துக்கு அவர் கோயில் விமானத்தைக் கோபுரமாகக் கருதிக் கூறிய கருத்துகள். பொதுவாகக் கட்டடக்கலை கற்கைநெறி மேனாட்டுக் கட்டடக்கலையை அடிப்படையாகக்கொண்டு கற்பிக்கப்படுவது. அதில் பாரம்பரியக் கட்டடக்கலை ஆழமாகக் கற்பிக்கப்படுவதில்லை. பெளத்தக் கட்டடக்கலை , இந்துக் கட்டடக்கலை பற்றியெல்லாம் கற்பிக்கப்படுவதில்லை. இதன் காரணமாகவும் அவரது புரிதலில் தெளிவின்மை ஏற்பட்டிருக்கலாம்.

இதிலவர் கோபுரம் பற்றிக் கூறியவற்றைப் பார்க்கலாம். முதலில் கூறுகின்றார் 1080 இல் சோழரால் தஞ்சைபெரிய கோவிலில் அறிமுகப்படுத்தபட்டதுதான் கோபுரம் என்கின்றார். அதன் பின் இன்னுமோரிடத்தில் கூறுகின்றார். இலங்கைத்தமிழர்களின்
கொயில் அமைப்பு கேரளாவுடன் அதிகம் தொடர்புள்ளது தமிழகத்துடனல்ல என்கின்றார். இன்னுமோரிடத்தில் கூறுகின்றார் தமிழ்நாட்டில் கோயில் வாசலிலுள்ளது கோபுரம் என்கின்றார். மேலுமோரிடத்தில் இலங்கையில் கோபுரம்


அறிமுகப்படுத்தப்பட்டது கடந்த இருபது , முப்பது வருடங்களில்தானென்கின்றார் .

தஞ்சைபெரிய கோயிற் காட்சி.. விமானம் -கோபுரம் பற்றிய இவரது கூற்றுகள் அவை பற்றிய இவரது அறியாமையை[ப் புலப்படுத்தின. முதலாம் இராசராசனின் தஞ்சைப்பெருவுடையார் ஆலயத்திலிருப்பது கோபுரமல்ல. அது விமானம். தஞ்சைப்பெரிய கோயில் , கங்கை கொண்ட சோழபுரம் ஆகியவற்றின் காலகட்டம் ஆலய வடிவமைப்பில் விமானங்கள் கோலோச்சிய காலகட்டம். விமானம் என்பது ஆலயத்தின் கர்ப்பக்கிருகத்தின் மேல் (கருவறையின் மேல்) அமைக்கப்படுவது. அக்காலச்சோழர் காலத்தில் அமைந்திருந்த ஆலயங்களில் கோபுரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. பிற்காலச்சோழர்களின் காலகட்டத்திலேயே அவற்றின் முக்கியம் அதிகரிக்கத்தொடங்கிப் பின்னர் விஜயநகரசப் பேரசு காலத்தில் , நாயக்கர் கோலத்தில் அவை ஆலய அமைப்பில் கோலோச்சத்தொடங்கின. விசயநகரப்பேரரசு காலத்தில்தான் ஆலயங்கள் பெருமண்டபங்களையும் கொண்டிருக்கத்தொடங்கின. மேலும் இவர் கூறுவதுபோல் அண்மைக்காலத்தில்தான் இருபது , முப்பது வருடங்களில்தான் யாழ்ப்பாணத்தில் கோபுரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது தவறானது என்பது யாவருக்குமே தெரியும்.

இது தவிர இலங்கைத் தமிழருக்கும், கேரளாவுக்குமிடையிலான தொடர்புக்கு இவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார். அதனையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இலங்கைத்தமிழருக்கும் கேரளாவுக்குமிடையில் தொடர்புகள் இருந்தன. அவற்றின் விளைவாக இருபக்கமும் தாக்கங்கள் ஏற்பட்டன. அவை இயல்பானவை. அதற்காக இவர் தமிழர்களின் ஒட்டுமொத்த வரலாற்றையுமே மாற்றி விடுவது ஏற்கத்தக்கதல்ல. முப்பது , நாப்பதுகளில் யாழ்ப்பாணத்துக்கும், கேரளாவுக்குமிடையிலான வர்த்தகத்தொடர்புகள் உச்ச நிலையிலிருந்ததை அக்கால ஈழகேசரிப் பத்திரிகைச் செய்திகள் வாயிலாக அறிந்துகொள்ளலாம். உதாரணமாகப் புகையிலை வர்த்தகத்தைக் குறிப்பிடலாம்.


இன்னுமொரு விடயத்திலும் இவர் தவறிழைக்கின்றார். சிங்களவர்கள், தமிழர்கள் மத்தியில் ஒரு காலத்தில் கி.பி ஆரம்ப நூற்றாண்டுகளில் அவ்விதமான சூழல் இருந்ததை மணிமேகலைக் காப்பியம் எடுத்துக்காட்டும், சிங்கள மன்னன் கஜபாகு கண்ணகி வழிபாட்டை இலங்கைக்குக்கொண்டு வந்தது எடுத்துக்காட்டும். சிங்களவர்கள் அதாவது பெளத்தர்கள் மத்தியில் பத்தினி வழிபாடு ஏற்பட அது முக்கிய காரணம். சிங்கள மக்கள் மத்தில் ஏற்பட்ட பத்தினி வழிபாட்டை ஒட்டுமொத்தமாகத் தமிழ் இந்துக்கள் மத்தியிலும் ஏற்பட்டதாகத் தீர்மானித்துக் கருத்துகளைக் கூறுகின்றார் அஞ்சலேந்திரன். அது தவறானது. தமிழர்கள் மத்தியிலுல் கண்ணகி வழிபாடு அக்காலகட்டத்தில் ஏற்படத்தான் செய்தது. தமிழ்ப்பகுதிகளிலுள்ள கண்ணகியம்மன் ஆலய வழிபாட்டை அதற்குதாரணமாகக் காட்டலாம்.


இவ்விதமானதொரு சூழலில் இலங்கைத்தமிழர்கள் அதிகமாக தமிழகச்சோழர்களின், பாண்டியர்களின் பண்பாட்டுத் தாக்கங்களுக்கே ஆட்பட்டிருந்தார்கள். நல்லூர் சோழர் காலத்திலேயே பிரபலமான நகராக விளங்கியது. யாழ்ப்பாண அரசின் உருவாக்கத்தில் பாண்டியரின் தாக்கம் பலமாக இருந்ததையே வரலாறு எடுத்தியம்புகின்றது. நல்லூரில் அமைந்திருந்த முருகன் ஆலயக் கட்டடம் இடிக்கப்பட்டு , கோட்டை கட்டப் போர்த்துக்கீசர் பாவித்தனர் என்பது வரலாறு. யாழ்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட சோழர் காலக்கல்வெட்டொன்று நல்லூரை நல்லை மூதுரென்கின்றது.  இவ்விதமாக வரலாறிருக்க அஞ்சலேந்திரன் வரலாற்றையே திரிக்கின்றார்.

- கோபுரம் -

மேலுமின்னொன்றையும் கூறுகின்றார். அது: இலங்கைத் தமிழர்களின் புனித நூல் இராமாயணமோ மகாபாரதமோ அல்ல. சிலப்பதிகாரமே. சிலப்பதிகாரத்தைத் தமிழர்கள் யாருமே புனித நூலாகக் கொள்வதில்லை. ஐம்பெருந் தமிழ்க் காப்பியங்களிலொன்றாகவே கொள்வார்கள். சிலப்பதிகாரம் உருவான காலத்தில் கூடச் சேரர்கள் தமிழர்கள். சேர நாடு தமிழகத்தின் ஒரு பகுதி. சேரர் மூவேந்தரில் ஒரு பிரிவினர்.

அஞ்சலேந்திரன் இலங்கைத்தமிழர்களின் , தமிழகத்தின் வரலாறு, இந்து, திராவிடக் கட்டடக்கலை பற்றிய ஞானம் நிறையவே பெற வேண்டியிருப்பதை அவரது இக்காணொளிக் கருத்துகள் புலப்படுத்துகின்றன.



கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனின் நேர்காணலையுள்ளடக்கிய காணொளி: https://www.youtube.com/watch?v=0QU8m4VOxXY&fbclid=IwAR3DS7PjLOUvrWe6a0nuJ9k4cqoqVwz5lgH3__zjNmEP_sZd9DVhKKN7HJ4


https://www.geotamil.com/index.php/2021-02-11-18-08-43/6038-2020-07-03-03-41-28 

Tuesday, May 28, 2019

வ.ந.கிரிதரனின் கட்டடக்கலைக் குறிப்புகள் : களனி விகாரைக் 'கண தெய்யோ' (பிள்ளையார்)


களனியா ரஜமகா விகாரைப்பிள்ளையார் களனி ரஜ மகா விகாரை மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பயின்றுகொண்டிருந்தபோது எமது முதலாவது வருடத்தில் 'வெளிக்களக் கட்டடக்கலை' (Field Architecture) என்றொரு பாடமுமிருந்தது. அப் பாடம் வார இறுதி நாள்களிலொன்றான சனிக்கிழமையில்தானிருக்கும். அப்பாடத்தின் நோக்கம் கட்டடக்கலை முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களைச் சென்று பார்ப்பது. எமது பல்கலைக்கழகம் கொழும்பு மாநகரிலுள்ள மொறட்டுவைப்பகுதியிலிருந்ததால் கொழும்பு மாநகரிலுள்ள கட்டடங்களையே சென்று பார்ப்பது. கட்டடக்கலைஞர்களின் கவனத்துக்குள்ளாகிய இல்லங்கள், பழம்பெரும் சரித்திரச்சின்னங்கள், நகரின் சுதந்திர சதுக்கம் போன்ற முக்கிய கட்டடங்கள் ஆகிய பல கட்டடங்களைச் சென்று பார்த்திருக்கின்றோம். அவ்விதம் சென்று பார்த்த எல்லாக்கட்டடங்களின் விபரங்களும் ஞாபகத்தில் இல்லாவிட்டாலும் சில கட்டடங்களுக்கான எமது விஜயங்கள் மட்டும் இன்னும் பசுமையாக ஞாபகத்திலுள்ளன.

- கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரன் -
இப்பாடத்துக்கு எமக்கு விரிவுரையாளராகவிருந்தவர் இன்று தெற்காசியாவின் முக்கிய கட்டடக் கலைஞர்களிலொருவராக அறியப்படும் கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரன் அவர்களே. புகழ்பெற்ற கட்டடக்கலைஞராக விளங்கிய ஜெஃப்ரி பாவாவின் (Geoffrey Bawa) மாணவர். இவரைபற்றி Anjalendran: Architect of Sri Lanka  என்னுமொரு நூலினை டேவிட் ராப்சன் (David Robson) என்பவர் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அஞ்சலேந்திரனின் கட்டடக்கலைப்பங்கபபளிப்பு பற்றிப் பின்னர் விரிவாக எழுதும் எண்ணமுண்டு. யாழ் நகரிலுள்ள பல்வேறு காரணங்களுக்காகப் புகழ்பெற்ற அசோகா ஹொட்டலை வடிவமைத்தவர் இவரே. அக்ஹொட்டல் வடிவமைக்கப்பட்ட காலத்தில்தான் இவர் எங்களுக்கு விரிவுரையாளராகவிருந்தார். அதனால் எமது விடுமுறைக்காலத்தில் அக்ஹொட்டல் கட்டி முடிக்கப்பட்டிருந்த ஆரம்ப காலத்தில் அங்கு சென்று பார்த்திருக்கின்றோம்.  இவர் மிகவும் புகழ்பெற்ற தமிழ் அரசியல்வாதிகளிலொருவராக   விளங்கிய 'அடங்காத்தமிழன்' என்று அறியப்பட்ட, முன்னாள் வவுனியாப் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த சுந்தரலிங்கம் அவர்களின் பேரன். எமக்கு இப்பாடமெடுத்துக்கொண்டிருந்ந காலத்தில் எப்பொழுதும் டெனிம்ஸ் பாண்ட் அணிந்து வருவார். இவர் சிறுவயதிலிருந்தே கொழும்பு வாசியாகவிருந்தவரென்று நினைக்கின்றேன்.


களனி ரஜா மகா விகாரை இலங்கையின் சிங்கள மக்களைப்பொறுத்தவரையில், குறிப்பாகப் பெளத்த சமயத்தைவரைப்பொறுத்தவரையில் மிகவும் சரித்திர , சமய முக்கியத்துவம் வாய்ந்தது. கெளதம புத்தர் பரிநிர்வாண நிலையடைந்து , எட்டு ஆண்டுகள் கடந்து, மூன்றாவது தடவையாக இலங்கைக்கு வந்த சமயம் கி.மு.500 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்டதாக பெளத்தர்களால் நம்பப்படுகிறது. கோட்டை இராச்சியத்தில் புகழ்பெற்று விளங்கிய இப்பெளத்த ஆலயம் பின்னர் போர்துகீசர் காலத்தில் பறிமுதல் செய்யப்பட்டுப் பின்னர் கீர்த்தி சீறீ ராஜசிங்கன் காலத்தில் மீள்புனருத்தானம் செய்யப்பட்டது.

கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரன்எமது 'வெளிக்களக்கட்டடக்கலை'ப் பாடத்துக்கான விஜயத்தின்போது ஒருமுறை விரிவுரையாளர் அஞ்சலேந்திரனுடன் களனி ரஜமகா விகாரைக்கும் சென்றிருந்தோம். யாழ்தேவியில் கொழும்பு நோக்குப் பயணிக்கையில் , பண்டைய பெளத்தர்களின் புனித நகர்களிலொன்றாகிய அநுராதபுரத்தைப் புகைவண்டியில் கடக்கையில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அபயகிரி விகாரை, ரூவன் வெலிசாய மற்றும் ஜீத்தவனாராம தாதுகோபங்களைப் பார்த்திருந்த எனக்கு களனி விகாரையே முதன் முதல் நான் நேரில் சென்று பார்த்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விகாரையாகும்.

இந்த விகாரைக்கான விஜயத்தை நினைக்கையில் எனக்கு உடனடியாகத்தோன்றுமொரு விடயம் விகாரையின் பின்புறச் சுவரிலுள்ள இந்துக்கடவுள் ஒருவரின் சிலைதான். அவர்தான் கண தெய்யோ என்று பெளத்த சிங்களவர்களால் அழைக்கப்படும் பிள்ளையார். அந்தப்பிள்ளையாரையே இங்குள்ள புகைப்படமொன்றில் நீங்கள் காண்கின்றீர்கள்.

தென்னிலங்கையில் இவை போன்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல புராதனக் கட்டடங்களுள்ளன.இவற்றையெல்லாம் நாம் சுற்றுலாக்களில் சென்று பார்க்கவேண்டும். துரதிருஷ்ட்டவசமாக நாட்டில் இதுவரை நிலவிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் காரணமாக இவ்வகையான பழமையின் சின்னங்களையெல்லாம் இனக்கண் கொண்டு பார்க்கும் போக்கு நிலவியது. அந்நிலை இனியாவது மாற வேண்டும். நாட்டு மக்கள் மத்தியில் நிலவும் சகல வகையான சமூக, அரசியல் முரண்பாடுகளெல்லாம் காலப்போக்கில் நீங்கி, மக்கள் இயல்பான வாழ்க்கைக்குத்திரும்பும் நிலை உருவாகட்டும். உருவாகுமென்று நம்புவோம். பாருங்கள் இது போன்ற ஆலயங்களில் இந்துக்கடவுள்களும், பெளத்தக்கடவுள்களும் எவ்வ்வளவு ஒற்றுமையாக விளங்குகின்றார்கள். நாம்தாம் வெளியில் அடிபட்டுக்கொண்டிருக்கின்றோம்.

முகநூல் எதிர்வினைகள்:

1. Maheswaran Murugaiah அநேகமாக எல்லா புத்த விகாரைகளிலும் பிள்ளையார் சிலை காணப்படுகின்றது .தங்களின் காவல் தெய்வம் என்றும் சொல்வார்கள்

2. Pena Manoharan நீங்கள் சொல்வது சரிதான்.ஆனால் அநுராதபுரம் ரூவானவெலிசாய கோயிலில் உட்பிரகாரத்தில் எல்லாளன் ஒரு திசையில் யானைமீதும் எதிர்த்திசையில் துட்டகைமுனுவும் இருந்ததை என் பால்யத்தில்....அறுபதுகளில் பார்த்த ஞாபகம்.இது சரிதானா என்பதைப் பழைய படங்கள் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும்.2015 இல் நான் போனபோது இரண்டு சிலைகளும் வெளிப்பிரகாரத்தில் தற்காலிகக் கூடாரத்தில் மூடி வைக்கப்பட்டிருந்தது.உங்கள் கணினி...கட்டிடத் தொழில்நுட்ப ஞானத்தால் என் கூற்றை ஆய்வு செய்து உண்மைநிலை உரைக்க முடியுமா நண்பரே..

3. Thilina Kiringoda Giri, Anjalendran came for only two sessions of experiencing in Architecture in the first year. Two weeks later Prof. KRS Pieris sacked him as a Visiting Lecturer because he had criticized Prof. Pieris.

4. Giritharan Navaratnam //Two weeks later Prof. KRS Pieris sacked him as a Visiting Lecturer // Hi Kiringoda, it is news to me. I still remember visiting Kelaniya Raja Maha Vihara with him. It was a memorable visit for me. For me, it looks like he came more than two sessions. May be I am wrong. Kelaniya visit is still fresh in my memory. We also visited few beautiful houses and Independence Square with him, I think.

5. Thilina Kiringoda Do not forget that I was the batch rep.

6.Athanas Jesurasa '// பாருங்கள் இது போன்ற ஆலயங்களில் இந்துக்கடவுள்களும், பெளத்தக்கடவுள்களும் எவ்வ்வளவு ஒற்றுமையாக விளங்குகின்றார்கள். நாம்தாம் வெளியில் அடிபட்டுக்கொண்டிருக்கின்றோம்.// - சடப் பொருள்கள் சண்டை பிடிக்க முடியாதுதானே! அதே பிள்ளையார் சிலைகளைக் குளத்தில் வீசிவிட்டு, "பிள்ளையார் குளிக்கப் போய்விட்டார்" (கணதெய்யோ நான்ட கியா) என்று கூக்கிரலிட்டதெல்லாம் யதார்த்தத்தில் நடந்துமுள்ளன!

7. Siva Sivakumaran I remember him as a quite outspoken architect, speaking his mind not fearing about the established architects or academics. Can't think of anyone else of that calibre - perhaps Vidura is another one...

8. Giritharan Navaratnam Hi kiringoda , Siva, Siva Sivakumaran , is one year senior to us. I hope you remember him.He was staying at Molpey with Baskaran & Kunasingam..

9. Siva Sivakumaran Thilina, to further refresh your memory, I left Justin's just before you joined.

10.Thilina Kiringoda Siva Sivakumaran I remember you. During my first year, your batch mates Hiran Leitan and Praneeth Amaratunga and I were in the same boarding house at Rawatawatta. After they had left RL Ravichandra joined me. From your batch only 7 are remaining in the country. Dotta, Dottie, Ganepola, Panapitiya, Anura Jayathilaka and Dharshanie. From ours Piyal, Saba, Nihal Bada, Kulatunga, Mandawela, Saroja, Champa and Chaya are in the country. Shanthi and Aryadasa passed away. We are planning to celebrate the 40th year of our getting together in October this year. I am trying to collect contact details of our batch mates who are domiciled abroad. If you know any pl forward it to me via e-mail: ltkirin@hotmail.com.

ngiri2704@rogers.com

நன்றி: http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4379:-2-&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54

Wednesday, August 2, 2017

சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் 21வது நினைவுப் பேருரை - கட்டடக்கலைஞர் சி.அஞ்சலேந்திரன்

சுவாமி விபுலானந்தர் இலக்கிய விமர்சகர், பேராசிரியர், கவிஞர், ஆசிரியர், துறவி என்பவைகளுக்கும் அப்பால் அவர் கிழக்கிலங்கையில் இந்து மறுமலர்ச்சியை 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 1948 வரை முன்னெடுத்தார் என கட்டடக் கலைஞர் சி.அஞ்சலேந்திரன் தெரிவித்தார்.



சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் 125 வது நினைவு தினவிழா மற்றும் 21வது நினைவுப் பேருரை புதன்கிழமை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அவர் ஆற்றிய நினைவுப் பேருரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

நினைவுப் பேருரை - எனது பணிகள் சுவாமியின் சமூக மறுமலர்ச்சிப் பணிகளோடு  ஒத்துப்போகிறது. ஏனென்றால் பொதுவாகக் கருதப்படுவதுபோல் செல்வந்தர்களின் அதிகார எல்லைக்குள் முடக்கியிருந்த கட்டடக்கலையை மீட்டு சாதாரண மக்களுக்கு, குறிப்பாக  ஏழைகளுக்கும் பயன்தரவல்லதாக மாற்ற முயல்கின்றேன்.

அண்மையில் ஐரோப்பாவில் ஆறுவார விடுமுறை காலத்தில், நெதர்லாந்தில் நீண்ட புகையிரதப் பிரயாணத்தின்போது பாட்குலாம் ஆலிகான் பாடிய ராக்ஹமிர் என்னும் கீதத்தைக் (கர்நாடாக இசையில் அது ஹமிர்கல்யாணி என அறியப்படுகின்றது) கேட்டேன். அது எனது ஐ-பாட்டில் உள்ள எம். எஸ். சுப்புலட்சுமி முதல் ஏ. ஆர். ரஹ்மான் வரை பாடிய, எனக்கு மிக விருப்பமான ராக்யாமன் கல்யாணியின் வேறுபட்ட வடிவங்களாகும். எல்லா அழகுகளையும் கண்டு கொண்டிருந்த போதும் குறித்த ஒன்றிலிருந்துதான் உயிர்த்தெழ முடியும். ஒருவன் தான் எவ்விடத்திற்கு உரியவன் என்பதையும் தன்னைத்தான் அறிந்து கொள்வதையும் நல்ல தொடக்கமாக கொள்ள முடியும்.

எனது கலைக்கூட செயற்பாடு

இன்று மூன்று தொடக்கம் நான்கு உதவியாளர்களுடன் இயங்கும் ஒரு கலைக்கூடமாக உள்ளது. 26 ஆண்டுகளுக்கு முன்பு கட்டடக்கலை செயற்பாடுகளை எனது தாயின் வீட்டு விறாந்தையில் இருந்து மேற்கொண்டேன். எனது அலுவலகம் ஒவ்வொரு நாளும் சுருட்டிக் கொண்டு போகக் கூடியதாக இருந்தது.
இப்போது அது எனது சொந்த வீட்டு விறாந்தையிலிருந்து இயங்குகின்றது. எனது போக்குவரத்து ஒரு முச்சக்கரவண்டியில் நடக்கிறது. லண்டனில் எனது பட்டப்பின்படிப்பை முடித்துக் கொண்டு 40 வருடங்களுக்கு முன்னர் நாடுதிரும்பினேன். அப்படிப்பு  எனக்கு வாழ்க்கை பற்றிய பொது மதிப்பைத் தந்தது. இருந்தபோதிலும் நான் நடைமுறை கட்டடக்கலையை இலங்கையின் தலைசிறந்த கட்டக்கலை விற்பன்னரான யோஃபெரிபாவாவிடம் இருந்து பயின்று கொண்டேன். குரு – சிஷ்ய முறையில் வாரத்திற்கு நாற்பது மணித்தியாலயம் என்ற அளவில் 10 ஆண்டுகள் அவரிடம் பயிற்சி பெற்றேன். இக்காலத்தில் நான் வேதனமெதுவும் பெற்றுக் கொள்ளவில்லை.

கட்டடக்கலையின் முதன்மையான கேள்வி

நான் நாட்டுக்கு வந்தவுடன் இலங்கை கட்டடக்கலை தொடர்ச்சியானதா, பாரம்பரியமானதா அமைவில் இது நவீன வாழ்க்கை முறைகளையும் விருப்பங்களையும் எற்கத் தயாரா உள்ளதா? என்ற கேள்வி என்னை எதிர்கொண்டது. எனக்கு விருப்பமான மத்திய கால, மிகுந்தலை தோட்டமான கலுடிய பொக்குன (கறுத்த நீர்தடாகம்) இயற்கையோடு இசைந்து வழமையான ஒழுங்கையும் வெளிகளையும் கொண்டிருக்கிறது. பாரம்பரியத்தின் இயக்கம் மற்றும் நவீனம் என்பவைகள் உயிர்த்துடிப்புடன் இயைந்து யோஃபெரிபாவாவின் பல்வகைப்பாணிகளில் இழையோடியுள்ளமையை காணலாம்.

இருந்த போதிலும் இந்த முக்கிய அம்சம், தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர், மலை நகரான கண்டி திரித்துவக் கல்லூரியின் துணை அதிபராக இருந்த கண்டோர் அவர்களால் 'சிங்களவர்களுக்கான ஆராதனை கூட்டம்' ஒன்றை கூட்டும்போது முன்னெடுக்கப்பட்டது. இந்துப்பாரம்பரியத்துக்கும் நவீனத்துக்குமான தொடர்பை நான் 40 களில் அன்ருபோயட், 50 களில் மினைற்றேசில்வா (யாரும் சிந்திக்காத காலத்தில் அவர் பிராந்திய நவீன கட்டடக்கலை பற்றி சிந்தித்தார்) 60 களின் உல்ரிக் பிளேஸ்னரின் மற்றும் யோஃபெரிபாவாவின் எழுத்துக்களிலும் பணிகளிலும் மேலும் அறிந்து கொண்டேன். உல்ரிக் பினேஸ்னருக்கு கட்டடக்கலையானது பயன்பாட்டுத்தன்மையும் 'ஆன்மாவுக்கான வீடாகவும்' உள்ளது.

60 களில் நடைமுறையில் இருந்த கடும் அரசியல் கொள்கை காரணமாக வெளிநாட்டுப் பொருள்களுக்கும் வெளிநாட்டுப் பிரயாணங்களுக்கும் தடைவிதித்தமையாளது உல்ரிக் பிளேஸ்னரினதும் யோஃபெரிபாவாவினதும் கட்டடக்கலையை செழிக்க வைத்தது. கட்டடக்கலையோடு ஒத்த துறைகளான பார்பராசன்சோனியின் வண்ணப்புடவை கைத்தறி நெசவுஇ மற்றம் எனடி சில்வாவின் உயிர்த்துடிப்புடைய பற்றிக்துணி உற்பத்தியையும் மற்றும் லக்கினேலூக்காவின் கட்டட நகலெடுப்பு கலைபோன்றவற்றையும் விளக்குவித்தது. அன்றுபோயட்டை தவிர எனது பெருமதிப்பு மேலே சொல்லப்பட்டவர்களுக்கு உரியதாகும். அவர்கள் இந்த அத்திவாரத்தில் நின்று அசாதாரணமான காரியங்களைப் புரிந்திருக்கிறார்கள்.

யோஃபெரிபாவாவின் கட்டடக்கலை

சமகால தென்னாசியாவின் தலைசிறந்த கட்டடக்கலை வல்லுநர்களில் ஒருவராக கருதப்படுவர். யோஃபெரிபாவா என்பது ஒருண்மையான கூற்றாகும்.  மேற்குலகின் கட்டடக்கலை ஒரு வெளித்தெரியும் பொருளாகும். ஆனால் பாவாவின் கட்டடக்கலை இத்தகையதல்ல. ஹவுஸ் ஒவ் த ரெட் கிளிவ் இல் மைல்கேல் ஒண்டாச்சி விபரித்துள்ளதின்படி 'அது வடிவமற்ற உலகின் வடிவமாகும்'. பாவா தனது பணியை பெந்தோட்டை லுணுகங்காவில் உள்ள தனது தோட்டத்தில் தோட்டக்கலைஞராகத் தொடங்கினார். தோட்டங்களையே கட்டட பொருளாக உபயோகித்து அவர் கட்டடங்களை வடிவமைத்தார் என்று கூட ஒருவர் சொல்லக்கூடும். ஆதனால் வெளி, வெளித்தோற்றம்;, எதிர்பாரா திருப்பங்கள் கொண்டதாக தோட்டங்களை ஆக்கினார். எளிமையாகச் சொன்னால் பாவாவுக்கு ஒரு கட்டடத்தை வடிவமைப்பதென்பது ஒரு தோட்டத்தை தோட்டத்துக்குள் உருவாக்குவதாகும். அந்தவகையில் பாபாவாவின் கட்டடக்கலை தனித்துவமானது.

கட்டடக்கலையில் என்ன முக்கியமானது

நாளாந்த வாழ்வின் முரண்பாடுகளைஇ பிரதானமாக குறை அபிவிருத்தி மற்றும் வன்செயல்களை வெளிக்காட்டும் மற்றக்கலைகளைப் போல் அல்லாமல், துரதிஷ்டமாக கட்டடக்கலை வாழ்க்கையை கொண்டாடுவதாக இருக்கின்றது. மிகவும் கடுமையான வெளித்தோற்றம் மாத்திரம் கொண்ட இன்ப உணர்வற்ற நிலப்பரப்பில் வரண்டு தெரியும் கட்டுமானங்களைக் கண்டு நான் மனவருத்தமடைகின்றேன். இந்தப் பொது நியதியை ஏற்றுக்கொண்டு ஒருவர்; உணர்வுéர்வமாக, திகைப்பில்லாமல், சிக்கனமாக நாளாந்த வாழ்வுக்குரிய கட்டடக்கலையை சன்னாடஸ்வத்த விபரித்துள்ளபடி தெரிவு செய்ய வேண்டும்.  அவர் கூறுகிறார் 'ஒவ்வொரு செயற்பாடும் அழகியல் அம்சங்களை கொண்டிருக்க வேண்டும்' அந்தவகையில் இலங்கை கட்டடக்கலைக்கு எனது பங்களிப்பு அது அழகியல் அம்சங்களை கொண்டிருக்க வேண்டும் என்பதை உயர்தொழில் புரியும் மத்தியதர வகுப்பு, தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் மற்றும் அனாதை இல்லங்களை கட்டும் நிறுவனங்கள் மட்டத்தில் வலியுறுத்தியதாகும்.

நான் இங்கே படாடோபமில்லாத கவனத்தை ஈர்க்காத வட்டார பாணி கட்டடங்களைக் கண்டேன். அது பொதுமக்களிடையே அதிகம் புழக்கத்தில் இருந்ததாகும். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைவது சிறிய இளைப்பாறும் மண்டபங்கள் அல்லது குருநாகலில் கலகவெதரவில் உள்ளது போன்ற அம்பலங்களாகும். இந்த அம்பலம் நெல்வயல்களைப்  பார்த்தபடி அவைகளின் ஓரத்தில் தட்டையான பாறையில் நான்கு தூண்களை நிறுத்தி அமைக்கப்பட்டுள்ளது. இது பரிéரணமாக எனது கட்டடக்கலை எண்ணங்களைப் பிரதிபலிப்பதால் நான் அவைகளில் ஒரு நெருக்கத்ததை உணர்கிறேன்.
 இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆசியக்கலைகளின் முடிவான நோக்கம் கடவுளின் நிலையை அடைவதென்று மேற்கிற்கும் கிழக்கிற்கும் விளக்கினார். ஆனந்த குமாரசாமி துயரமும் துன்பமும் இடைக்கிடை கொண்டு வெளிப்புகளும் நிகழும். இலங்கைக்கு அது ஒரு தியான புகலிடத்தை வழங்கினாலே அது எனக்கு போதுமானது.


முடிவுரை

விரைவாக மாறிக்கொண்டிருக்கும் அலைபேசி மற்றும் இணயங்களின் காலத்தில் நிரந்தமான கட்டடக்கலை உள்ளதா என்ற கேள்வி என்னிடம் எழுப்பப்படுகின்றது. எனது பதில் தேடிக்கொண்டிரு, வர்த்தக நோக்கத்துக்காக தடம் மாறாதே (பிழையான சட்டங்கள் தான் முக்கிய காரணம்) எனது பிரதேசத்தின் வரலாற்றை அறிந்து, பெருமிதம் கொண்டு சாதனைபுரி என்பதாகும். 
http://thamildomain.com/article/433