Showing posts with label கலை. Show all posts
Showing posts with label கலை. Show all posts

Monday, May 16, 2022

கட்டடக்கலலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்!


 அண்மையில் 'Kälam / Tradition & Heritage /C.Anjalendran / The Architecture of the Tamil Hindus of Sri Lanka' என்னும் தலைப்பிடப்பட்ட , இலங்கைக் கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனுடான நேர்காணலை உள்ளடக்கிய காணொளியொன்றினைப் பார்த்தேன். அதில் அவர் தெரிவித்துள்ள கருத்துகள் சிலவற்றைப்பற்றிய என் கருத்துகளின் பதிவிது. காணொளிக்கான இணைப்பினை இப்பதிவின் இறுதியில் தந்துள்ளேன்.


முன்னாள் வவுனியா பா.உ சி.சுந்தரலிங்கத்தின் பேரனும் , கட்டடக்கலைஞருமான அஞ்சலேந்திரனின் உரையிது. அஞ்சலேந்திரன் புகழ்பெற்ற இலங்கை, தெற்காசியக் கட்டடக்கலைஞர்களிலொருவர். இங்குள்ள காணொளியில் அஞ்சலேந்திரன் இந்துக் கட்டடக்கலை பற்றிக் கூறிய கருத்துகளிலிருந்து அவருக்கு இந்துக்கட்டடக்கலை பற்றி மேலோட்டமான புரிதல்தான் உள்ளதோ என்று சந்தேகப்படுகின்றேன். உதாரணத்துக்கு அவர் கோயில் விமானத்தைக் கோபுரமாகக் கருதிக் கூறிய கருத்துகள். பொதுவாகக் கட்டடக்கலை கற்கைநெறி மேனாட்டுக் கட்டடக்கலையை அடிப்படையாகக்கொண்டு கற்பிக்கப்படுவது. அதில் பாரம்பரியக் கட்டடக்கலை ஆழமாகக் கற்பிக்கப்படுவதில்லை. பெளத்தக் கட்டடக்கலை , இந்துக் கட்டடக்கலை பற்றியெல்லாம் கற்பிக்கப்படுவதில்லை. இதன் காரணமாகவும் அவரது புரிதலில் தெளிவின்மை ஏற்பட்டிருக்கலாம்.

இதிலவர் கோபுரம் பற்றிக் கூறியவற்றைப் பார்க்கலாம். முதலில் கூறுகின்றார் 1080 இல் சோழரால் தஞ்சைபெரிய கோவிலில் அறிமுகப்படுத்தபட்டதுதான் கோபுரம் என்கின்றார். அதன் பின் இன்னுமோரிடத்தில் கூறுகின்றார். இலங்கைத்தமிழர்களின்
கொயில் அமைப்பு கேரளாவுடன் அதிகம் தொடர்புள்ளது தமிழகத்துடனல்ல என்கின்றார். இன்னுமோரிடத்தில் கூறுகின்றார் தமிழ்நாட்டில் கோயில் வாசலிலுள்ளது கோபுரம் என்கின்றார். மேலுமோரிடத்தில் இலங்கையில் கோபுரம்


அறிமுகப்படுத்தப்பட்டது கடந்த இருபது , முப்பது வருடங்களில்தானென்கின்றார் .

தஞ்சைபெரிய கோயிற் காட்சி.. விமானம் -கோபுரம் பற்றிய இவரது கூற்றுகள் அவை பற்றிய இவரது அறியாமையை[ப் புலப்படுத்தின. முதலாம் இராசராசனின் தஞ்சைப்பெருவுடையார் ஆலயத்திலிருப்பது கோபுரமல்ல. அது விமானம். தஞ்சைப்பெரிய கோயில் , கங்கை கொண்ட சோழபுரம் ஆகியவற்றின் காலகட்டம் ஆலய வடிவமைப்பில் விமானங்கள் கோலோச்சிய காலகட்டம். விமானம் என்பது ஆலயத்தின் கர்ப்பக்கிருகத்தின் மேல் (கருவறையின் மேல்) அமைக்கப்படுவது. அக்காலச்சோழர் காலத்தில் அமைந்திருந்த ஆலயங்களில் கோபுரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. பிற்காலச்சோழர்களின் காலகட்டத்திலேயே அவற்றின் முக்கியம் அதிகரிக்கத்தொடங்கிப் பின்னர் விஜயநகரசப் பேரசு காலத்தில் , நாயக்கர் கோலத்தில் அவை ஆலய அமைப்பில் கோலோச்சத்தொடங்கின. விசயநகரப்பேரரசு காலத்தில்தான் ஆலயங்கள் பெருமண்டபங்களையும் கொண்டிருக்கத்தொடங்கின. மேலும் இவர் கூறுவதுபோல் அண்மைக்காலத்தில்தான் இருபது , முப்பது வருடங்களில்தான் யாழ்ப்பாணத்தில் கோபுரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது தவறானது என்பது யாவருக்குமே தெரியும்.

இது தவிர இலங்கைத் தமிழருக்கும், கேரளாவுக்குமிடையிலான தொடர்புக்கு இவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார். அதனையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இலங்கைத்தமிழருக்கும் கேரளாவுக்குமிடையில் தொடர்புகள் இருந்தன. அவற்றின் விளைவாக இருபக்கமும் தாக்கங்கள் ஏற்பட்டன. அவை இயல்பானவை. அதற்காக இவர் தமிழர்களின் ஒட்டுமொத்த வரலாற்றையுமே மாற்றி விடுவது ஏற்கத்தக்கதல்ல. முப்பது , நாப்பதுகளில் யாழ்ப்பாணத்துக்கும், கேரளாவுக்குமிடையிலான வர்த்தகத்தொடர்புகள் உச்ச நிலையிலிருந்ததை அக்கால ஈழகேசரிப் பத்திரிகைச் செய்திகள் வாயிலாக அறிந்துகொள்ளலாம். உதாரணமாகப் புகையிலை வர்த்தகத்தைக் குறிப்பிடலாம்.


இன்னுமொரு விடயத்திலும் இவர் தவறிழைக்கின்றார். சிங்களவர்கள், தமிழர்கள் மத்தியில் ஒரு காலத்தில் கி.பி ஆரம்ப நூற்றாண்டுகளில் அவ்விதமான சூழல் இருந்ததை மணிமேகலைக் காப்பியம் எடுத்துக்காட்டும், சிங்கள மன்னன் கஜபாகு கண்ணகி வழிபாட்டை இலங்கைக்குக்கொண்டு வந்தது எடுத்துக்காட்டும். சிங்களவர்கள் அதாவது பெளத்தர்கள் மத்தியில் பத்தினி வழிபாடு ஏற்பட அது முக்கிய காரணம். சிங்கள மக்கள் மத்தில் ஏற்பட்ட பத்தினி வழிபாட்டை ஒட்டுமொத்தமாகத் தமிழ் இந்துக்கள் மத்தியிலும் ஏற்பட்டதாகத் தீர்மானித்துக் கருத்துகளைக் கூறுகின்றார் அஞ்சலேந்திரன். அது தவறானது. தமிழர்கள் மத்தியிலுல் கண்ணகி வழிபாடு அக்காலகட்டத்தில் ஏற்படத்தான் செய்தது. தமிழ்ப்பகுதிகளிலுள்ள கண்ணகியம்மன் ஆலய வழிபாட்டை அதற்குதாரணமாகக் காட்டலாம்.


இவ்விதமானதொரு சூழலில் இலங்கைத்தமிழர்கள் அதிகமாக தமிழகச்சோழர்களின், பாண்டியர்களின் பண்பாட்டுத் தாக்கங்களுக்கே ஆட்பட்டிருந்தார்கள். நல்லூர் சோழர் காலத்திலேயே பிரபலமான நகராக விளங்கியது. யாழ்ப்பாண அரசின் உருவாக்கத்தில் பாண்டியரின் தாக்கம் பலமாக இருந்ததையே வரலாறு எடுத்தியம்புகின்றது. நல்லூரில் அமைந்திருந்த முருகன் ஆலயக் கட்டடம் இடிக்கப்பட்டு , கோட்டை கட்டப் போர்த்துக்கீசர் பாவித்தனர் என்பது வரலாறு. யாழ்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட சோழர் காலக்கல்வெட்டொன்று நல்லூரை நல்லை மூதுரென்கின்றது.  இவ்விதமாக வரலாறிருக்க அஞ்சலேந்திரன் வரலாற்றையே திரிக்கின்றார்.

- கோபுரம் -

மேலுமின்னொன்றையும் கூறுகின்றார். அது: இலங்கைத் தமிழர்களின் புனித நூல் இராமாயணமோ மகாபாரதமோ அல்ல. சிலப்பதிகாரமே. சிலப்பதிகாரத்தைத் தமிழர்கள் யாருமே புனித நூலாகக் கொள்வதில்லை. ஐம்பெருந் தமிழ்க் காப்பியங்களிலொன்றாகவே கொள்வார்கள். சிலப்பதிகாரம் உருவான காலத்தில் கூடச் சேரர்கள் தமிழர்கள். சேர நாடு தமிழகத்தின் ஒரு பகுதி. சேரர் மூவேந்தரில் ஒரு பிரிவினர்.

அஞ்சலேந்திரன் இலங்கைத்தமிழர்களின் , தமிழகத்தின் வரலாறு, இந்து, திராவிடக் கட்டடக்கலை பற்றிய ஞானம் நிறையவே பெற வேண்டியிருப்பதை அவரது இக்காணொளிக் கருத்துகள் புலப்படுத்துகின்றன.



கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனின் நேர்காணலையுள்ளடக்கிய காணொளி: https://www.youtube.com/watch?v=0QU8m4VOxXY&fbclid=IwAR3DS7PjLOUvrWe6a0nuJ9k4cqoqVwz5lgH3__zjNmEP_sZd9DVhKKN7HJ4


https://www.geotamil.com/index.php/2021-02-11-18-08-43/6038-2020-07-03-03-41-28 

Friday, October 1, 2021

கட்டடச்சூழலும் எம்மவர்களும் - 02 (பாடசாலைகள்)

 கற்றல் நிலையங்களின் வடிவமைப்பு

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக்கல்லூரிகள் மாணவர்களின் கற்றலுக்கு உரிய இடம். குறித்த இடங்கள் காலத்திற்கு காலம் வெவ்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டன. ஆரம்ப காலத்தில் குருகுலக்கல்விக்கு ஏற்ற குடில்களே போதுமானவையாக இருந்தன. அதற்குப்பின்னர் சமயக்கல்வி தேவை ஏற்பட்ட காலத்தில் கோவில்களும் மடங்களும் போதுமானவையாக இருந்தன. மொழிக்கல்வி தேவைப்பட்ட காலத்தில் வீட்டுத்திண்ணைகள் கல்விச்சலைகளாக உருவாகின. தொடர்ந்து வந்த காலப்பகுதியில் தேவைகளுக்கும் வசதிகளுக்கும் ஏற்ப கட்டடங்கள் உருவாகி வளர்ந்து கற்றலுக்குரிய கட்டடச்சூழல் என்பது தற்போதுள்ள நிலையை அடைந்துள்ளது.

இன்று அநேகமான நிறுவனங்களின் கட்டமைப்புக்கள் சர்வதேச தரத்திற்கு அல்லது அதற்கு இணையாக மாறுவது என்பது பொதுவான போக்காகக் காணப்படுகின்றது. கல்விசார் நடவடிக்கைகளும் இதற்கு விதிவலக்கானவை அல்ல. கல்விக்கொள்கைகளிலும் கற்பித்தல் முறைகளிலும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆனாலும் கட்டடச்சூழல் சர்வதேச தரத்திற்கு மாற்றம் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாடசாலைகளில் நிகழும் பௌதீக மாற்றங்களும் பொருத்தமான திட்டத்துடன் இடம்பெறவில்லை என்பது இந்தக்கட்டுரையை வாசித்த பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள எந்தப்பாடசாலைக்கு சென்று பார்த்தால் உங்கள் கண்களுக்குப் இலகுவாகப்புலப்படும்.

 


எனக்குத் தெரிந்தவகையில் இதற்கு காரணமாக….. 

1. கட்டடங்கள் கட்டுவது என்பது பொருளாதாரம் தொழில்நுட்பம் சார்ந்த விடயம் என்பதாலும், பொதுப்பாவனைக்கானது என்ற காரணத்தாலும் கட்டடங்களை வடிவமைக்கப்படும் போது கற்றல் நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்களின் நலன் சார்ந்து சிந்திப்பதோ முடிவெடுப்பதோ இல்லை. உதாரணமாக அருகருகே முற்றாக மூடப்படாத வகுப்பறையில் மாணவர்கள் நெருக்கமாக இருத்தி வைக்கப்பட்டு கற்பித்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது சில சந்தர்பங்களில் கற்பித்தலுக்கு இடையூறாக அமைந்துவிடுகின்றது.  

2. அதிகரித்து வரும் மாணவர்களின் தேவைக்கு ஏற்ப காணிகள் அதிகரிக்காத நிலையில் மிக நெருக்கமாக கட்டடங்கள் அமைக்கப்படுகின்றது. இதனால் பாடசாலை ஆரம்பிக்கும் முன்னும் பின்னும் இடைவேளை நேரங்களின் போதும் மாணவர்கள் ஒன்றுகூடுவதற்கும் அவர்களுக்கான அசைவுகளுக்கும் போதிய இடங்கள் காணப்படுவதில்லை. மிக முக்கியமாக ஆரோக்கியமான வாழ்விற்குத் தேவையான காற்று மற்றும் வெளிச்சம் போதாத நிலையும் காணப்படுகின்றது. 

3. கட்டடங்கள் காலத்திற்கு காலம் கட்டடப்படுவதால் அநேகமான சந்தர்பங்களில் கட்டடங்கள் தனியாகவும் தொகுதியாகவும் பார்க்கும் போது பயன்படுத்தப்படும் கட்டடப்பொருட்கள், பூசப்படும் வர்ணங்கள், போன்றவற்றால் பாடசாலை கட்டடங்களின் ஒட்டுமொத்த வெளிப்பாடு மனதில் அமைதி உணர்ச்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக ஒழுங்கீனத்தையும், அமைதியின்மையையும் ஏற்படுத்துகின்றன. 

4. இன்றைய காலங்களில் கற்றலில் ஈடுபடும் மாணவர்களின் தேவைகள் வெவ்வேறாக இருப்பதால் திட்டமிடப்படாத கட்டடச்சூழல் அவர்களின் தேவைகளை பூர்த்திசெய்ய தவறிவடுகின்றன. இதனால் குறித்த சூழல் மாணவர்களின் நடத்தைகளில் தாக்கத்தை செலுத்துவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. 

5. கற்றலில் ஈடுபடுபவர்களின் தேவை அறிந்து அவர்களுக்கு ஏற்ற ஆரோக்கியமான கற்றல் சூழலை ஏற்படுத்தி மாற்றம் காணவேண்டும். 

6. அபிவிருத்தி அடைந்த நாடுகளில் கற்றலுக்கான சூழல் தொடர்ச்சியாக மாற்றம் கண்டு வந்துகொண்டிருக்கின்றது. ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் கல்விக்கான கட்டடச்சுழல் என்பது பொருத்தமான வகையில் மாற்றம் காணவில்லை. குறிப்பாக எங்களுடைய காலநிலை, பொருளாதாரம் மற்றும் தேவைகள் என்பவற்றுக்கு ஏற்ப தேவைகள் மதிப்பீடு செய்யப்பட்டு தேவைகள் அல்லது பிரச்சனைகளுக்கான தீர்வு காண வேண்டும். சந்தைச்சக்திகள் தீர்மானம் எடுப்பதில் அல்லது தாக்கம் செலுத்துவதை இயன்றளவும் குறைக்க வேண்டும். 

7. இவ்வாறான பிரச்சனைகளுக்கு மூல காரணமாக குறித்த கல்விசார் நிர்வாகம் மாணவர்களின் மீது அக்கறை இன்மையே காரணமாகும். இதை ஏற்க மறுக்கலாம்.....தாங்கள் அக்கறை உள்ளவர்கள் என்று சொல்லலாம் அப்படியாயின் அவர்களுக்கு விடயம் பற்றிய போதிய அறிவில்லை என்றே கூறவேண்டும். 


 முன்பள்ளிகளும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களும்

சிறுவர்களுக்கான  கட்டடங்கள்  அமைத்தல் என்பது ஒவ்வொரு குடும்பங்களினதும் வசதி வாய்ப்புக்கள் பெற்றோரின் விருப்பு வெறுப்புக்கள் சம்பந்தப்பட்டது. சிறுவர்களுக்கான பொழுபோக்கு இடங்கள் எவ்வாறு அமைக்கப்படுகின்றது என்பது பற்றி முன்னைய பதிவுகளில் இருந்து அறிந்திருப்பீர்கள்.

வீட்டில் வைத்து பிள்ளைகளைப் பராமரிக்கின்ற வசதிகள் குறைந்து போய்யுள்ளதால் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை நாடுவதும் அல்லது 3 வயது ஆரம்பிக்கும் போதே அவர்களை முன்பள்ளிகளில் சேர்த்துவடுவதும் இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது. இந்த நிலையை சாதகமாக்கி பல பொது அமைப்புக்களும், தனியார் நிறுவனங்களும் முன்பள்ளிகளை நிறுவி பராமரித்து வருகின்றன.

சிறுவர் பராமரிப்பு நிலையங்களில்  அல்லது  முன்பள்ளியில் கற்கும் 3 வயது தொடக்கம் 5 வயது வரையான சிறுவர்களுடைய இடங்கள்,  சிறுவர்களுக்கு பொருத்தமானதாக இருக்கின்றதா என்று உங்களுக்கு அருகில் இருக்கும் முன்பள்ளி ஒன்றுக்குச் சென்று அவதானியுங்கள் அப்போது உங்களுக்கு உண்மை நிலை புரியும்.


சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலையோடு தற்போதுள்ள நிலையை ஒப்பிட்டால் முன்னேற்றம் இருந்தாலும், தற்போதுள்ள நிலை என்பது கவலைக்குரியதே. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிகமுக்கியமான காரணம் குறித்த நிறுவனங்களை ஆரம்பித்து இயக்குபவர்களின் சிறுவர் வளர்ப்பு பற்றி அக்கறை இன்மை அல்லது சிறுவர்கள் பற்றிய போதிய அறிவின்மை என்பது முக்கியமானது.

முன்பள்ளிக்கான கட்டடங்களை எடுத்துக்கொண்டால், சனசமூக நிலையம், கோவில் மண்டபம், பொதுநோக்கு மண்டபம் போன்ற வேறு தேவைகளுக்கு கட்டப்பட்ட கட்டடங்கள் கற்பித்தல் தேவைகளுக்கு பயன்படுத்தப்படுவதை அநேகமாக காணக்கூடியதாக உள்ளது.

கற்றல் என்பது தனியாக பரீட்சைக்காக கற்பது என்ற எண்ணமே மேலோங்கி இருப்பதால், சூழலில் இருந்து கற்கும் சந்தர்பங்கள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. சிறுவர்களுக்கு என்ன தேவை என்பதை பெரியவர்கள் தங்கள் அறிவுக்கும் வசதிக்கும் ஏற்றவகையில் சிந்திப்பதால் அவர்களுக்கு தேவையானவை பூரணமாக வழங்கப்படப்படவில்லை என்றே கூறவேண்டும்.

 

மலசல கூடங்கள்

குடாநாட்டில் உள்ள பாடசாலைகளின்  மலசல கூடம்... எல்லோரும் ஒரு காலத்தில் ஏன் இன்று கூட  மாணவர்களாக இருக்கலாம்…

பாடசாலை நாட்களில் நடந்த பல பசுமையான நினைவுகளை  மறக்காமல் கதைத்துக்கொண்டு இருப்பவர்கள் பாடசாலைகளில் உள்ள மலசல கூடங்களில் பெற்ற  துன்பமான அனுபவங்கள் பற்றி யாரும் பொதுவெளியில் கதைத்தது கிடையாது.




பொதுவாக பாடசாலை மலசல கூடங்கள் போதிய வெளிச்சமோ.... காற்றோட்டமோ இருக்காது நீர்குழாய்களில் இருந்து நீர் கசிந்துகொண்டோ  அல்லது உடைந்த நிலையில் மரக்கட்டைஇறுக்கிய நிலையிலேயே காணப்படும். சுவர்களில் பட்டப்பெயர்கள் தூசனங்கள் காதல் வரிகள் காணப்படும்

 நிலத்திற்குப் பதித்த மாபிள்களின் மேல் மண் மற்றும் சரியாக வழிந்தோடாத நீர் தேங்கி இருக்கும் பார்ப்பதற்க அருவருப்பாக இருக்கும். சிறுநீர் மணம் தாங்கமுடியாமல் இருக்கும். அதிபர்கள், ஆசிரியர்களின் பயன்பாட்டிற்கு பூட்டிய நிலையில் மலசல கூடங்கள் இருக்கும்.

பெண்கள் பாடசாலைகள் பெற்றோரிடம் பணம் வாங்க  சொல்கின்ற  காரணங்களில் மலசலகூடப் பிரச்சனை முக்கியமானது  ஆனாலும் 6ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட பெண் பிள்ளைகள் கடும் நெருக்கடி என்றால் மட்டுமே பாடசாலை மலசகூடங்களை உபயோகிக்கின்றார்கள்  என்ற உண்மை பெண்பிள்ளைகளை பெற்ற அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும்.( இலங்கை அரச பாடசாலைகளில் 65 வீதமான மாணவிகள் மாதவிடயாய் காலத்தில் பாடசாலைகளுக்கு வருவதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது)

மலசல கூடங்கள் சீராக இல்லாமல் இருப்பதற்கு  மாணவர்களை குறைசொல்வது வழமை  இருப்பினம்  மாணவர்களை வழிநடத்த தவறிய பொறுப்பை  ஆசிரியர்களும் பாடசாலை நிர்வாகமுமே ஏற்கவேண்டும். 

அவதானங்களின் படி மலசல கூடங்ககளின் வடிவமைப்பு  மற்றும் கட்டுமாணத்திற்கு பொறுப்பு எடுக்கும்  பொறியிலாளர்கள் தொழில்நுட்ப வியலாளர்கள் அவற்றின் பாவனை மற்றும் பராமரிப்பு பற்றி முழுமையாக அக்கறை எடுத்துக்கொள்ளாமை முக்கிய காரணம்.

கல்வியைப் போன்றே சுகாதாரமும் அடிப்படை தேவைகளில் ஒன்று மாணவர்களின் சுகாதாரம் சார்ந்த செயற்பாடுகளை மேம்படுத்த சுகாதாரக் கல்வி என்று ஒரு பாடத்தை வைத்துக் கொண்டு, அதனை கற்பித்து செயல் படுத்தி, சுகாதாரம் பேணப்பட வேண்டிய இடத்தில், முன் உதாரணமாக செயல்படாமல் இருப்பதை யாரிடம் சொல்லி அழுவது

 இவ்வாறன பிரச்சனைகளுக்கு உடனடித்தீர்வுகள் காண முடியாவிட்டாலும், குறித்த விடயங்கள் பற்றி சிந்திக்க தொடங்கும் போது சிறிது காலத்திற்குப் பின்னராவது பொருத்தமான தீர்வுகளை எடுக்க முடியும்.



அழகான ஆரோக்கியமான சூழலில் வளரும் வாய்ப்புக் கிடைத்த குழந்தைகள் அதிஷ்டசாலிகளே.


குமாரலிங்கம். பதீதரன்
கடட்டடக்கலைஞர்.

Friday, September 17, 2021

நினைவுச்சின்னங்கள்

வீரர்களை நினைவு கூர்ந்து நடுகல் வழிபாடு இருந்ததாக சொல்லப்படும் எமது பாரம்பரியத்தில் சினைவுச்சின்னங்கள் , நினைவுத்தூபிகள் வைப்பது என்பது எப்போது இருந்து எமது கலாசாரத்தில் இருந்து என்னால் எதுவும் உறுதியாக கூறமுடியாது ஆனாலும் பிற நாடுகளில் பல்வேறு விதமான நினைவுச்சின்னங்கள் போர் வெற்றி, முக்கிய நிகழவுகளை நினைவுபடுத்தி வைப்பதும், நாட்கள் செல்ல அவை  குறிப்பிட்ட இடங்களின் அடையாளமாகவும் மாறுகின்ற சந்தர்பங்கள் இருக்கின்றது. ஒன்றை ஒன்று பார்த்து ஒருவரைப் போல மற்றவர் செய்வது இன்று சாதாரணமானது....அந்த வகையில் நினைவுச்சின்னங்களை நாங்களும் பிரதி எடுத்த சந்தர்பங்களும் உண்டு இதனால் வரலாற்றில் நினைவுச்சின்னங்களுக்கு எப்போதும் தனியிடம் உண்டு.....

 

ஈழத்தில் காணமல் போனவர்கள் சிலருக்கு நினைவுச்சின்னம் அமைத்த காரணத்தால் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் பொலீசாரால் விசாரணை என்ற செய்தி படித்தபோது இன்னொருவிடயம் என்னுடைய கண்ணில் பட்டது. தாய் தந்தையருக்கும் நினைவுத்தூபி அமைத்துள்ளார் என்பதும், அதில் டிஎன்ஏ இன் மாதிரியும் வைக்கப்பட்டுள்ளது என்பதும் ஆகும். வழமை போல ஊடகங்கள் தங்களுக்குத் தேவையான விடயங்களை மையப்படுத்தி பல முக்கிய விடயங்களை விழுங்கி விடுவதால்....... நான் அறிந்தவற்றை பகிர்ந்து கொள்ளவே இந்தப்பதிவு.....

யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற முக்கிய நினைவுச்சின்னங்களுக்கும் மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயாவிற்கும் மிகநெருங்கிய தொடர்பு இருப்பது உங்களில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.



பல்வேறு மதரீதியான அரசியல் சர்ச்சையில் இருப்பவர் அவர் இருந்தாலும் தாய் தந்தையருக்கு நினைவுச்சின்னம் அமைத்தவர் என்ற வகையில் அவரை நேரில் சந்தித்தேன். அவர் கூறியவற்றை எனது புரிதலுடன் எழுதுகின்றேன்.



சைவ சித்தாந்தத்தில் பதி, பசு, பாசம் என்ற என்ற முப்பொருள் குறிப்பிடப்படுகின்றது. இவை அநாதி அதாவது தொடக்கமும் முடிவும் இல்லாதவை. இதில் பசுவை (உயிரை) டிஎன்ஏ என அவர் கொள்கின்றார். அதாவது டிஎன்ஏக்கும் பசுவிற்கும் (உயிருக்கும்) ஒரே இயல்பு எனக்கொண்டு தன்னுடைய நினைவுச்சின்ன வடிவமைப்பில்  டிஎன்ஏ இற்கும் ஒரு இடம் கொடுத்துள்ளார்.  மேலும்  பதியான கடவுளை நோக்கி பசு எப்போதும் நகரும் இதனை  கட்டடக்கலையில் அடி பருத்து நுனி ஒடுங்கிய வடிவில் அமைத்து வெளப்படுத்தலாம் என்று எம் முனனோர்கள் தங்களுடையடைய பல்வேறு கட்டக்கலைப்படைப்புகளில் பின்பற்றி உள்ளார்கள் அதனால் தான் வடிவமைத்த தாய் தந்தையருக்கான நினைவுத்தூபியின் உச்சியில் இந்த உத்தியைக் கையாண்டு உள்ளார்.

 

இனிச்சொல்லப்போவது ஒரு வரலாற்றுத்தகவல்.....

 



யாழ்ப்பாணத்தில் தமிழர்களின் அரசியல் பண்பாட்டு எழுச்சியில் மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயாவின் பங்கு முக்கியமானதாக இருந்திருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் 4ஆவது உலகத்தமிழராட்சி மாநாட்டை நடத்தியவர்களில் முக்கியமானவர்.....அதன் போது ஏற்பட்ட கலவரத்தில்  இறந்து போன பொதுமக்களுக்கு நினைவுத்தூபி அமைத்தவர்களில் முக்கியமானவர்.....

தந்தை செல்வா அவர்கள் இறந்தவேளை ஒரு ரூபா பெறுமதியான கொடிகள் அடித்து மக்களிடம் இருந்து 30 ஆயிரம் ரூபா பணம் சேர்த்து நினைவுத்தூபி அமைப்பதற்கு அடி எடுத்துகொடுத்தது மட்டுமல்ல....அதனை கட்டடக்கலைஞர் V.S. துரைராஜா அவர்களைக் கொண்டு வடிவமைத்து, கட்டப்பட்டுக்கொண்டு இருக்கும் வேளையில் இன்னொரு கட்டடக்லைஞரும் காந்தியவாதியுமான டேவிற் அவர்களுடைய ஆலோசனையை ஏற்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தூபியின் அளவிற்கு அதிகமாகவும், கோவில் கட்டடக்கலையில் பின்னபற்றப்படும் விமானத்தை தூபியின் உச்சியில் அமைப்பதற்கு  ஏற்பாடுகள் செய்தவர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

இந்த நினைவுத்தூபி தற்போது மீண்டும் சமயச்சிக்கலில் சிக்கி அரசியலாக மாறிக்கொண்டு இருப்பது பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது.....

 

இன்னும் ஒரு பண்பாட்டுப்புரட்சி நிகழப்போகின்றது....

 



இதுவரை காலமும் இல்லாத வகையில் 50 அடி நீள அகலம் கொண்ட கருவறை அமைத்து,  25 அடி நீள அகலம் கொண்ட முன் மண்டபம் உடைய பிள்ளையார் கோவில் கட்டப்பட்டு வருகின்றது. இந்தக் கோவிலின் கருவறை மேல்108 அடி உயரமான விமானம் கட்டப்படவுள்ளது. இங்கு வழமையான  கோவில் கட்டும்  விதி முறைகள் இல்லை....அடியார்கள் கருவறைக்குள் செல்லலாம், நேரடியாகவே பிள்ளையாருடன் கதைக்கலாம், படைக்கலாம், கும்பிடலாம். இந்தக் கோவிலுக்கு அருகில் அழகான குளம்....இதுவும் மறன்வன்புலவில் சச்சிதானந்தம் ஐயா மேற்கொண்டு வரும் பண்பாண்டுப்புரட்சிக்கான வித்து

கடட்டடக்கலைஞர். கு. பதீதரன்

Tuesday, September 19, 2017

நிலையான சமாதானத்திற்காக ஆனையிறவில் ஒரு நினைவாலையம்

இலங்கையில் நிலவிய ஆயுதப்;போராட்டமானது 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கபட்ட பின்னர் முடிவுக்கு வந்தது. அதற்கு பின்னர் இலங்கை இராணுவத்தினரும், மக்களில் ஒரு பகுதியினரும்  பாற்சோறு பரிமாறுதல், நினைவு இடங்கள் அமைத்தல், வருடாந்த நிகழ்வுகள் செய்தல், அனுபவப்பகிர்வு செய்தல் எனப்பல்வேறு வகையில் போர் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். இன்றும் மகிழ்கின்றனர். இக்கொண்டாட்டமானது தோற்றுப்போனதாக கருதப்பட்ட பெரும்பாலான தமிழ் மக்களை மனதளவில் பாதித்தது. அதனை தமிழர்களும் இன நல்லினக்கத்தில் அக்கறையுள்ள வேறு பலரும் சுட்டிக்காட்டி வந்தனர் இன்றும் வருகின்றனர்.

தொடர்ந்து வந்த அரசியல் மாற்றங்கள் காரணமாக இலங்கையின் அரசாட்சியானது மாற்றங்கண்டது. குறித்த அரசானது நாட்டில் மக்களுக்கிடையில் நல்லிணக்கம் நிலவவேண்டும் என்ற அக்கறையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனூடாக மக்களில் ஒரு பகுதியினரைத் திருப்திப்படுத்தியும் அதே வேளை இன்னொருபகுதியினரின் வெறுப்பையும் சம்பாதித்துக்கொண்டது. 

நிலைமை இவ்வாறு இருக்க, நிரந்தரமாக கட்டப்பட்ட பல நினைவுத்தூபிகள் தொடர்ந்தும் நாட்டின் பல்வேறு பகுதியில் இருக்கின்றன. இவற்றில் வடக்கு கிழக்கில் இருக்கும் நினைவுத்தூபிகள் தோற்கடிக்கப்பட்டதாகக் கருதப்படும் தமிழர் பகுதியில் இருப்பதும், அவற்றைப் பார்பதற்காகவும், குறித்த போரில் உயிர் நீத்த படையினரின் உறவினர்கள் அவர்களை நினைவு கூர்வதற்காகவும் வந்து செல்வதும் தொடர்நது இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது. இதேவேளை போரில் உயிர்நீத்த புலிப்;போராளிகளை நினைவு கூர்வதற்கு தடைவித்த படையினர் அரசியல் மாற்றம் அடைந்ததும் நினைவு கூறுவதற்கு அனுமதித்து இருந்தனர். தொடர்ச்சியாக முன்பு அழிக்கப்பட்ட புலிகளின் மாவீரர் மயானங்கள் மீளக்கட்டப்பட வேண்டும் என்ற கோசங்களும், அதற்கான முயற்சிகளும் இடம்பெற்றன.

மேற்குறித்த இரண்டு தரப்பினரது போரில் ஈடுபட்ட தரப்பினரையும் அதனோடு சேர்ந்த நிகழ்வுகளையும் நினைவு கூரும் முறையானது இலங்கையில் இனங்களுக்கு இடையிலான நல்லிக்கத்திற்குப் பதிலாக வேறு ஒன்றையே ஏற்படுத்துகின்றது அல்லது ஏற்படுத்தும்.

மேற்கூறப்பட்ட அனைத்தும் தற்போதைய நிலை. இந்த இடத்தில் 2002 ஆம் ஆண்டு மாசி மாதம் ஏற்பட்ட சமாதான காலத்தில் கட்டடக்கலை பயின்றவன் என்ற ரீதியில் நான் எடுத்துக்கொண்ட முயற்சியினை இங்கே கூறுவது நல்லிணக்கத்தில் அக்கறையுள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றேன்.
தமிழீழ விடுதலைப்புலிகளைச் சேர்ந்தவர்கள் மாவீரர்களுக்கு நினைவுத்தூபிகள் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர்களுடனும் கதைத்துப்பேசி தங்களுடைய எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க முற்பட்டனர். அத்துடன் இவ்வாறான வேலைத்திட்டங்களுடாக போராட்டத்துடன் விலகி நின்ற தமிழர்களை உள்வாங்கிக்கொண்டிருந்தனர். அந்த வகையில் நானும் கிளிநொச்சியில் ஊடகத்துறையுடன் சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக சென்று கொண்டிருந்தேன். என்னுடைய கல்விப்புலத்தை அறிந்த சிலர் மாவீரர் நினைவுத்தூபி அமைப்பது தொடர்பில் கதைத்தனர். அதற்கு என்னால் முன்மொழியப்பட்ட திட்டம்.

முழுப்போராட்டத்திற்குமான நினைவுத்தூபி ஒன்று அமைக்கலாம் அதுவும் ஆனையிறவில் அமைப்பதே சிறந்தது.

1. இலங்கiயின் தரைத்தோற்ற அமைப்பில் ஆனையிறவு கழுத்துப்பகுதி ஆகும். கழுத்தில் ஆபரணங்கள் அணிவது மனிதப்பண்பு. உடலின் இருவேறு வடிவமைப்பில் உள்ள பகுதிகளை கழுத்தே இணைக்கின்றது.

2. ஆனையிறவில் இடம்பெற்ற யுத்தம் பலரின் உயிரை காவு கொண்டது. (விடுதலைப்புலிகள், இராணுவம், பொது மக்கள்)
3. புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆனையிறவுத் தாக்குதலே சமாதான முயற்சிகளுக்கு வித்திட்டது.

4. குறித்த இடம் முற்று முழுதாக பொதுக்காணி (அரச) 

5. வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதிலும் பார்க்க பொது இடம் ஒன்றை அமைப்பதற்கு பொருத்தமான இடம். குறித்த இடத்தை கடந்தே தலைப்பகுதியான குடா நாட்டிற்கு ஒள்ளேயும், வெளியேயும் செல்ல முடியும் (பூநகரி பாலம் அமைப்பதற்கு முன்னர்)

6. இன்றைய திகதியில் ஏற்கனவே இராணுவத்தினர் தங்களுடைய நினைவுத்தூபியையும் போர் வெற்றிச்சின்னத்தையும் அமைத்து காட்சிப்படுத்தி வருகின்றனர். குறித்த இடத்தில் ஏனைய மக்களையும் நினைவு கூருவதற்கு இடம் அமைத்து குறித்த ஆனையிறவுப்பகுதியை நினைவாலயம் அமைக்கப்பயன்படுத்துவதே சிறந்தது.


நினைவுத்தூபியின் அமைப்பு



கொங்கிறீட்டில் உயரமாக அமைக்கப்படும் கூம்பு போன்ற (இணைக்கப்பட்டிருக்கும் படத்தை பார்க்கவும்.) படத்தில் காட்டியவாறான அமைப்பு.

அதில் உச்சியில் ஒரு திறந்த மற்றும் கண்ணாடியால் மூடப்பட்ட ஒரு துவாரம்.
அமைப்பில் மேற்புறத்தில்  படத்தில் காட்டிவாறான துளை.

நீண்ட தூர நடைக்குப்பின்னர் அமைப்பிற்குள் உள்ளே செல்வதற்கான வாயில்
உள்ளே சுற்றி வர நடந்து செல்வதற்கு ஏற்ற வட்டப்பாதை அதன் நிலம் மண்ணால் நிரப்பப்பட்டது.

உள்ளே நடுவில் தொக்கிய நிலையில் அணையா விளக்கு
குறித்த அமைப்பு கடலின் மேல் கட்டப்படுவதால் கடல் நீர் உள்ளே சென்றுவருவதற்கான ஏற்பாடு

நீண்ட நடை பாதையின் இரு மருங்கிலும் போரில் இறந்து போன பொதுமக்கள், போராளிகள் (அனைத்துப் போராட்டக்குழுக்களும்) படையினர், ஆகியோரை நினைவு கூருவதற்கு ஏற்ற வகையிலான  ஏற்பாடுகள்

போர் சம்பந்தமான வரலாறுகளைச் சொல்லக்கூடிய கண்காட்சிக்கூடம். இளைப்பாறும் இடங்கள் மற்றும் இதர வசதிகளுக்கு தேவையான அமைப்புக்கள். என்பன இடம் பெற வேண்டும் என்று எனது எண்ணத்தை தெரிவித்திருந்தேன்.

கட்டட அமைப்பின் கரு

உலகில் மனித வாழ்வு என்பது இயற்கையால் உருவாக்கப்படும் உடல் சம்பந்தப்பட்டது. உடலில் ஆன்மா இருக்கும் வரை அது தன்னுடைய செயல்களைச் செய்யும் உடலில் இருந்து ஆன்மா பிரிந்ததும் உடல் மீண்டும் பஞ்ச பூதங்களோடு கலந்து விடும். மனிதர்கள் இயற்கையை உணராத பட்சத்திலேயே மனிதர்கள் மனிதர்களுக்கு எதிராக அணிதிரள்கின்றனர். நாட்டு மக்கள் அனைவரும் இயற்கையை உணர வேண்டும். இயற்கையை உணர்ந்த மக்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்தியும், நெருக்கமாகவும் வாழ்வார்கள்.

போரில் சம்பந்தப்பட்ட அனைவரும் ஒரு இடத்தில் நினைவு கூரும் போது நாடடு மக்கள் எல்லோருக்கும் பொதுவான இடம் ஒன்று இயல்பாகவே உருவாக்கப்படும். 

குறித்த திட்டம் தொடர்பில் என்னுடைய நண்பர்கள் பலருடனும் கதைத்து இருந்தேன். குறித்த விடயத்தை இன்று வெளியிடுவதன் நோக்கம் என்னுடைய நாட்டில் இன்னொரு யுத்தம் ஒன்று ஏற்பட்டு அப்பாவி பொதுமக்கள் இன்னல்களை அனுபவிக்க கூடாது என்ற நோக்கமே. ஒருவரோடு இன்னொருவர் முரண்பட்டுக் கொள்வதற்கும், வெறுப்பதற்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும். அவர்களுடைய உணர்வுகளை சிலர் தங்களுடைய நலனுக்குப் பயன்படுத்தும் வேளையில் அவர்களுக்கு இடையில் சண்டைகளை ஏற்படுத்தி விடுவார்கள். கோபத்தில் இருப்பவர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையில் ஈடுபட்டு அழிந்து போக ஏனையவர்கள் அழிவுகளால் இலாபங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள் (ஆயுத வியாபாரிகளும் அதனோடு சார்ந்தவர்களும்)
யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு இடம் அமைக்க அனுராதபுரத்தை அரசு தெரிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் நிரந்த சமாதானத்தை விரும்பும் அனைவருக்கும் இந்தக்கட்டுரை சமர்ப்பணம். நெல் விதைத்தால் நெல் அறுபடை செய்யலாம் இது தான் யதார்த்தம்.


குமாரலிங்கம் பதீதரன்
கட்டடக்கலைஞர்

pathytharan@gmail.com 

Wednesday, August 2, 2017

சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் 21வது நினைவுப் பேருரை - கட்டடக்கலைஞர் சி.அஞ்சலேந்திரன்

சுவாமி விபுலானந்தர் இலக்கிய விமர்சகர், பேராசிரியர், கவிஞர், ஆசிரியர், துறவி என்பவைகளுக்கும் அப்பால் அவர் கிழக்கிலங்கையில் இந்து மறுமலர்ச்சியை 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 1948 வரை முன்னெடுத்தார் என கட்டடக் கலைஞர் சி.அஞ்சலேந்திரன் தெரிவித்தார்.



சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் 125 வது நினைவு தினவிழா மற்றும் 21வது நினைவுப் பேருரை புதன்கிழமை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அவர் ஆற்றிய நினைவுப் பேருரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

நினைவுப் பேருரை - எனது பணிகள் சுவாமியின் சமூக மறுமலர்ச்சிப் பணிகளோடு  ஒத்துப்போகிறது. ஏனென்றால் பொதுவாகக் கருதப்படுவதுபோல் செல்வந்தர்களின் அதிகார எல்லைக்குள் முடக்கியிருந்த கட்டடக்கலையை மீட்டு சாதாரண மக்களுக்கு, குறிப்பாக  ஏழைகளுக்கும் பயன்தரவல்லதாக மாற்ற முயல்கின்றேன்.

அண்மையில் ஐரோப்பாவில் ஆறுவார விடுமுறை காலத்தில், நெதர்லாந்தில் நீண்ட புகையிரதப் பிரயாணத்தின்போது பாட்குலாம் ஆலிகான் பாடிய ராக்ஹமிர் என்னும் கீதத்தைக் (கர்நாடாக இசையில் அது ஹமிர்கல்யாணி என அறியப்படுகின்றது) கேட்டேன். அது எனது ஐ-பாட்டில் உள்ள எம். எஸ். சுப்புலட்சுமி முதல் ஏ. ஆர். ரஹ்மான் வரை பாடிய, எனக்கு மிக விருப்பமான ராக்யாமன் கல்யாணியின் வேறுபட்ட வடிவங்களாகும். எல்லா அழகுகளையும் கண்டு கொண்டிருந்த போதும் குறித்த ஒன்றிலிருந்துதான் உயிர்த்தெழ முடியும். ஒருவன் தான் எவ்விடத்திற்கு உரியவன் என்பதையும் தன்னைத்தான் அறிந்து கொள்வதையும் நல்ல தொடக்கமாக கொள்ள முடியும்.

எனது கலைக்கூட செயற்பாடு

இன்று மூன்று தொடக்கம் நான்கு உதவியாளர்களுடன் இயங்கும் ஒரு கலைக்கூடமாக உள்ளது. 26 ஆண்டுகளுக்கு முன்பு கட்டடக்கலை செயற்பாடுகளை எனது தாயின் வீட்டு விறாந்தையில் இருந்து மேற்கொண்டேன். எனது அலுவலகம் ஒவ்வொரு நாளும் சுருட்டிக் கொண்டு போகக் கூடியதாக இருந்தது.
இப்போது அது எனது சொந்த வீட்டு விறாந்தையிலிருந்து இயங்குகின்றது. எனது போக்குவரத்து ஒரு முச்சக்கரவண்டியில் நடக்கிறது. லண்டனில் எனது பட்டப்பின்படிப்பை முடித்துக் கொண்டு 40 வருடங்களுக்கு முன்னர் நாடுதிரும்பினேன். அப்படிப்பு  எனக்கு வாழ்க்கை பற்றிய பொது மதிப்பைத் தந்தது. இருந்தபோதிலும் நான் நடைமுறை கட்டடக்கலையை இலங்கையின் தலைசிறந்த கட்டக்கலை விற்பன்னரான யோஃபெரிபாவாவிடம் இருந்து பயின்று கொண்டேன். குரு – சிஷ்ய முறையில் வாரத்திற்கு நாற்பது மணித்தியாலயம் என்ற அளவில் 10 ஆண்டுகள் அவரிடம் பயிற்சி பெற்றேன். இக்காலத்தில் நான் வேதனமெதுவும் பெற்றுக் கொள்ளவில்லை.

கட்டடக்கலையின் முதன்மையான கேள்வி

நான் நாட்டுக்கு வந்தவுடன் இலங்கை கட்டடக்கலை தொடர்ச்சியானதா, பாரம்பரியமானதா அமைவில் இது நவீன வாழ்க்கை முறைகளையும் விருப்பங்களையும் எற்கத் தயாரா உள்ளதா? என்ற கேள்வி என்னை எதிர்கொண்டது. எனக்கு விருப்பமான மத்திய கால, மிகுந்தலை தோட்டமான கலுடிய பொக்குன (கறுத்த நீர்தடாகம்) இயற்கையோடு இசைந்து வழமையான ஒழுங்கையும் வெளிகளையும் கொண்டிருக்கிறது. பாரம்பரியத்தின் இயக்கம் மற்றும் நவீனம் என்பவைகள் உயிர்த்துடிப்புடன் இயைந்து யோஃபெரிபாவாவின் பல்வகைப்பாணிகளில் இழையோடியுள்ளமையை காணலாம்.

இருந்த போதிலும் இந்த முக்கிய அம்சம், தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர், மலை நகரான கண்டி திரித்துவக் கல்லூரியின் துணை அதிபராக இருந்த கண்டோர் அவர்களால் 'சிங்களவர்களுக்கான ஆராதனை கூட்டம்' ஒன்றை கூட்டும்போது முன்னெடுக்கப்பட்டது. இந்துப்பாரம்பரியத்துக்கும் நவீனத்துக்குமான தொடர்பை நான் 40 களில் அன்ருபோயட், 50 களில் மினைற்றேசில்வா (யாரும் சிந்திக்காத காலத்தில் அவர் பிராந்திய நவீன கட்டடக்கலை பற்றி சிந்தித்தார்) 60 களின் உல்ரிக் பிளேஸ்னரின் மற்றும் யோஃபெரிபாவாவின் எழுத்துக்களிலும் பணிகளிலும் மேலும் அறிந்து கொண்டேன். உல்ரிக் பினேஸ்னருக்கு கட்டடக்கலையானது பயன்பாட்டுத்தன்மையும் 'ஆன்மாவுக்கான வீடாகவும்' உள்ளது.

60 களில் நடைமுறையில் இருந்த கடும் அரசியல் கொள்கை காரணமாக வெளிநாட்டுப் பொருள்களுக்கும் வெளிநாட்டுப் பிரயாணங்களுக்கும் தடைவிதித்தமையாளது உல்ரிக் பிளேஸ்னரினதும் யோஃபெரிபாவாவினதும் கட்டடக்கலையை செழிக்க வைத்தது. கட்டடக்கலையோடு ஒத்த துறைகளான பார்பராசன்சோனியின் வண்ணப்புடவை கைத்தறி நெசவுஇ மற்றம் எனடி சில்வாவின் உயிர்த்துடிப்புடைய பற்றிக்துணி உற்பத்தியையும் மற்றும் லக்கினேலூக்காவின் கட்டட நகலெடுப்பு கலைபோன்றவற்றையும் விளக்குவித்தது. அன்றுபோயட்டை தவிர எனது பெருமதிப்பு மேலே சொல்லப்பட்டவர்களுக்கு உரியதாகும். அவர்கள் இந்த அத்திவாரத்தில் நின்று அசாதாரணமான காரியங்களைப் புரிந்திருக்கிறார்கள்.

யோஃபெரிபாவாவின் கட்டடக்கலை

சமகால தென்னாசியாவின் தலைசிறந்த கட்டடக்கலை வல்லுநர்களில் ஒருவராக கருதப்படுவர். யோஃபெரிபாவா என்பது ஒருண்மையான கூற்றாகும்.  மேற்குலகின் கட்டடக்கலை ஒரு வெளித்தெரியும் பொருளாகும். ஆனால் பாவாவின் கட்டடக்கலை இத்தகையதல்ல. ஹவுஸ் ஒவ் த ரெட் கிளிவ் இல் மைல்கேல் ஒண்டாச்சி விபரித்துள்ளதின்படி 'அது வடிவமற்ற உலகின் வடிவமாகும்'. பாவா தனது பணியை பெந்தோட்டை லுணுகங்காவில் உள்ள தனது தோட்டத்தில் தோட்டக்கலைஞராகத் தொடங்கினார். தோட்டங்களையே கட்டட பொருளாக உபயோகித்து அவர் கட்டடங்களை வடிவமைத்தார் என்று கூட ஒருவர் சொல்லக்கூடும். ஆதனால் வெளி, வெளித்தோற்றம்;, எதிர்பாரா திருப்பங்கள் கொண்டதாக தோட்டங்களை ஆக்கினார். எளிமையாகச் சொன்னால் பாவாவுக்கு ஒரு கட்டடத்தை வடிவமைப்பதென்பது ஒரு தோட்டத்தை தோட்டத்துக்குள் உருவாக்குவதாகும். அந்தவகையில் பாபாவாவின் கட்டடக்கலை தனித்துவமானது.

கட்டடக்கலையில் என்ன முக்கியமானது

நாளாந்த வாழ்வின் முரண்பாடுகளைஇ பிரதானமாக குறை அபிவிருத்தி மற்றும் வன்செயல்களை வெளிக்காட்டும் மற்றக்கலைகளைப் போல் அல்லாமல், துரதிஷ்டமாக கட்டடக்கலை வாழ்க்கையை கொண்டாடுவதாக இருக்கின்றது. மிகவும் கடுமையான வெளித்தோற்றம் மாத்திரம் கொண்ட இன்ப உணர்வற்ற நிலப்பரப்பில் வரண்டு தெரியும் கட்டுமானங்களைக் கண்டு நான் மனவருத்தமடைகின்றேன். இந்தப் பொது நியதியை ஏற்றுக்கொண்டு ஒருவர்; உணர்வுéர்வமாக, திகைப்பில்லாமல், சிக்கனமாக நாளாந்த வாழ்வுக்குரிய கட்டடக்கலையை சன்னாடஸ்வத்த விபரித்துள்ளபடி தெரிவு செய்ய வேண்டும்.  அவர் கூறுகிறார் 'ஒவ்வொரு செயற்பாடும் அழகியல் அம்சங்களை கொண்டிருக்க வேண்டும்' அந்தவகையில் இலங்கை கட்டடக்கலைக்கு எனது பங்களிப்பு அது அழகியல் அம்சங்களை கொண்டிருக்க வேண்டும் என்பதை உயர்தொழில் புரியும் மத்தியதர வகுப்பு, தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் மற்றும் அனாதை இல்லங்களை கட்டும் நிறுவனங்கள் மட்டத்தில் வலியுறுத்தியதாகும்.

நான் இங்கே படாடோபமில்லாத கவனத்தை ஈர்க்காத வட்டார பாணி கட்டடங்களைக் கண்டேன். அது பொதுமக்களிடையே அதிகம் புழக்கத்தில் இருந்ததாகும். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைவது சிறிய இளைப்பாறும் மண்டபங்கள் அல்லது குருநாகலில் கலகவெதரவில் உள்ளது போன்ற அம்பலங்களாகும். இந்த அம்பலம் நெல்வயல்களைப்  பார்த்தபடி அவைகளின் ஓரத்தில் தட்டையான பாறையில் நான்கு தூண்களை நிறுத்தி அமைக்கப்பட்டுள்ளது. இது பரிéரணமாக எனது கட்டடக்கலை எண்ணங்களைப் பிரதிபலிப்பதால் நான் அவைகளில் ஒரு நெருக்கத்ததை உணர்கிறேன்.
 இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆசியக்கலைகளின் முடிவான நோக்கம் கடவுளின் நிலையை அடைவதென்று மேற்கிற்கும் கிழக்கிற்கும் விளக்கினார். ஆனந்த குமாரசாமி துயரமும் துன்பமும் இடைக்கிடை கொண்டு வெளிப்புகளும் நிகழும். இலங்கைக்கு அது ஒரு தியான புகலிடத்தை வழங்கினாலே அது எனக்கு போதுமானது.


முடிவுரை

விரைவாக மாறிக்கொண்டிருக்கும் அலைபேசி மற்றும் இணயங்களின் காலத்தில் நிரந்தமான கட்டடக்கலை உள்ளதா என்ற கேள்வி என்னிடம் எழுப்பப்படுகின்றது. எனது பதில் தேடிக்கொண்டிரு, வர்த்தக நோக்கத்துக்காக தடம் மாறாதே (பிழையான சட்டங்கள் தான் முக்கிய காரணம்) எனது பிரதேசத்தின் வரலாற்றை அறிந்து, பெருமிதம் கொண்டு சாதனைபுரி என்பதாகும். 
http://thamildomain.com/article/433

Thursday, June 29, 2017

”அம்பலம்”

Image may contain: sky, tree, cloud, plant, outdoor and nature

”அம்பலம்” என்பது, பொது மக்கள் கூடும் திறந்த வெளி தங்குமிடம்; அல்லது மறைத்து வைக்கப்பட்டிருந்த இரகசியம் வெளியாதல் ஆகும்.
முற்காலத்தில் கால் நடையாகவும், வண்டிகளிலும் நீண்ட பயணம் செய்பவர்கள் பகலிலும், இரவிலும் தங்கிச் செல்வதற்கு தெரு வோரங்களில் தெரிந்தெடுத்த இடங்களில் கட்டப்பட்ட தங்குமிடங்கள் ”அம்பலம்” எனப்படும்.
இந்த நிலையில், இலங்கையின் வடக்கிலும், தென்னிலங்கையிலும், ஏனைய பகுதிகளிலும் பண்டைக் காலத்தில் அம்பலங்கள் கட்டப்பட்டிருந்தன.
தென்னிலங்கையின் சிங்கள சந்தேசய பாட்டுக்களில் (தூதுப் பிரபந்தங்களில்) அம்பலங்கள் பற்றியும், அவற்றில் இரவில் தங்குவோரிடையில் நடைபெறும் சம்பாஷனைகள் பற்றியும் அழகாகக்கூறப்பட்டுள்ளது.
வடக்கில் அம்பலங்கள் மிகக் குறைவாகவே இருந்தன.
வடக்கில் அம்பலங்கள் எந்தெந்த இடத்தில் இருந்தன, அவை எவ்வெக்காலங்களில் எப்படிக் கட்டப்பட்டிருந்தன என்பதை ஆராய்ந்து கட்டுரைகளும், நூல்களும் எழுதப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை!!

எனக்குத் தெரிந்த வரையில், யாழ்ப்பாணம் - காங்கேசந்துறை பிரதான வீதியும், மானிப்பாய் - கைதடி தெருவும் எனது கிராமமான உடுவிலில் ஒன்றையொன்று வெட்டுமிடத்தின் வட மேற்கு மூலையில், பண்டைய காலத்தில் கட்டப்பட்ட அம்பலம் ஒன்று இருந்தது.

இதனை “மருதனார் மடம்” என்பர்!
இதற்கு அருகாமையில் தண்ணீர் கேணி, கல்லினால் செய்யப்பட்ட நீர் தாங்கிகள், பெரு மரங்கள் எல்லாம்இருந்தன.
இந்த நீர் தாங்கிகள் மாடுகள் தண்ணீர் குடிக்கவும், மனிதரின் பாவனைக்கும் செய்யப்பட்டிருந்தன.

தென்னிலங்கைக்கு மாட்டு வண்டிகளில் செல்வோர்கள் இந்த மடத்தினில் கூடியே பின்னர் ஒருமித்து செல்வதாகவும், தெற்கிலிருந்து வரும்போது பிரிந்து செல்வதாகவும் கூறப்பட்டது.

பிற்காலத்தில் பஸ் வண்டிகள் ஓட ஆரம்பித்த காலத்தில், இந்தச் சந்தியில் இறங்குவோர்கள் ”மருதனார் மடச் சந்தி” யில் இறங்குவதாகக் குறிப்பிட்டு, இந்தச் சந்தி ”மருதனார் மடச் சந்தி ” எனப் புகழ் பெற்றது.
ஆனால், மருதனார் ம்டம் பற்றித் தெரியாதவர்கள் இப்போது ஒரு பெரும் பகுதியை மருதனார் மடம் பகுதி என்கின்றனர்!!
சந்தியிலிருந்து அரைக் கிலோ மீற்றர் தூரத்திற்கு தெருவினால் செல்லும் இடங்களை எல்லாம் Road Development Authority ஆனது ”முருதனார் மடம் என எழுதியிருப்பதை அவதானிக்கலாம்.

ஒரு விடயத்தினைச் செய்யும்போது ஆராய்ச்து சரியாகச் செய்யவேண்டும் என்பது பற்றி இன்று எவரும் கவலைப் படுவதில்லைத்தானே?
அதிலும் தமிழர்கள் பெரும் மோசமானவர்கள் என்பதும் தெரியும்தானே?
இந்த மருதனார்மடமானது இன்றும் உள்ளது.

ஆனால், அதன் தெருவோரமாக இருந்த காணிப் பகுதியை, முன்னர் அப்பகுதிக்கு AGA ஆக இருந்த ஒருவர், உள்ளுராட்சி சபையில் அங்கத்தவர் ஆக இருந்த இணுவிலைச் சேர்ந்த ஒருவரும், வேறு சிலரும் கள்ள உறுதிகளை முடித்து, தமதாக்கியது மாத்திரமன்றி, அவ்விடங்களில் கடைகளையும்கட்டியுள்ளனர்!
எது விதத்திலும், மடத்தின் பழைய கட்டிடம்மிகவும் அண்மைக் காலம்வரை இருந்தே வந்தது, இன்றும் அதன் சிதைவுகள் உள்ளன!

இதைவிட, இச்சந்தியின் வடகிழக்கு மூலையில் காணிகளை வாங்கி இந்துப் பெண்களுக்கான பள்ளிக்கூடத்தினை கட்டிய சேர். பொன்னம்பலம் இராமநாதன் என்பவர், சந்தியின் வடகிழக்கு மூலைப் பகுதியில் இருந்து கேணி, கல் நீர் தாங்கிகள் என்பவைகளை உள்ளடக்கி பாடசாலை மதில் சுவரைக் கட்டிவிட்டார்.
இது உடுவில் கிராமத்தவர்களுக்கும். ஏனையோருக்கும் இராமநாதனுடன் முரண்பாடுகளை உருவாக்கி, கல்லடி வேலன் இராமநாதனின் இந்தச் செய்கையைக் கண்டித்துக் கண்டனப் பாட்டுக்களும் பாடியிருந்தார்.

அந்தப் பாட்டுக்கள் மக்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்தன.
ஆனால், இராமநாதனின் இந்தச் செய்கையை மக்களால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏன் எனில் அவருக்கு பிரித்தானிய ஆட்சியாளர்கள் மத்தியில் பெரும்செல்வாக்கு இருந்தது.
இராமநாதன் உண்மையில் வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மானிப்பாயில் திருமணம் செய்து உருவான வழித் தோன்ற்லாகும்!
இதனால், அவர் உடுவில் கிராமத்தவர்களின் நலன்களை கருத்தில் கொள்ளவில்லை. தனது குறிக்கோளை அடைவதில்தான் கண்ணாக இருந்தார்!

உடுவில் கிராமத்தவர்களுக்கான சுடலையானது மருதனார் மடச் சந்திக்கு அருகில் இணுவில் கிராமத்தில் இப்போது அமைந்துள்ள அனுமன் கோயிலுக்கு மேற்குப் புறமாக (பின் புறமாக) அமைந்திருந்தது.
இதனை அன்று ”சின்னாலங்கண்டடிச் சுடலை” என அழைத்தனர்.
இங்கு இறந்தவர்களின் உடல்களை எரிப்பது, தான் கட்டும் பெண்கள் கல்லூரியின் மாணவிகளுக்கு பயத்தை உண்டு பண்ணும் எனக் கூறி, அந்தக் காணியை அரசிடம் இருந்து தான் வாங்கிவிட்டு, இராமநாதன் உடுவில் மக்களுக்கான சுடலையை இணுவில் ரயில் நிலையத்திலிருந்து 1 கி. மீற்றர் தொலைவில் இருக்கும் வயல் பகுதியில் அமைத்துக் கொடுத்தார். இதற்கு பிரித்தானிய அரசு ஒத்துழைப்பினை வழங்கி இருந்தது.
இந்தச் சுடலையை ”பூவோடை சுடலை" என்பர்! இந்தச் சுடலையானது உடுவில் கிராமத்தவர்களுக்கான சுடலையாகும்.

இதனால், உடுவில் கிராமத்து மக்கள், 3- 6 கிலோமீற்றர்கள் இறந்த உடலை வெயில், மழைகளில் காவிச் சென்றே இன்றும் எரிக்கவேண்டிய கட்டாயம் இருந்துவருகிறது!
இதனால், உடுவில் கிராம மக்கள் இன்றும் சேர் பொன்னம்பலம் இராமநாதனைத் திட்டுவதூடாக அவர் நினைவு கூரப்படுகிறார்!!
யாழ்ப் பாணப்பகுதியின் அம்பலங்களின் நிலை”மருதனார் மடம்” போன்றதாகத்தான் பெரும்பாலும் இருக்கமுடியும்.

ஆனால், தென்னிலங்கையில் நிலைமை சற்று வேறுபட்டதாகக் காணப்படுகிறது.
நண்பர்களே!
தென்னிலங்கையின் PANAVITIYA AMBALAMA என்ற மரத்தால் கட்டப்பட்ட அம்பலம் பற்றிய ஒரு கட்டுரை கீழே தரப்பட்டுள்ளது.

படித்துப் பாருங்கள்!! - 
Vettivelu Thanam 

THE WOODEN WONDER OF PANAVITIYA AMBALAMA
25 June, 2017
Text and pix: Mahil Wijesinghe
Ambalama’ is a Sinhala word for a wayside rest-house. I first saw one when I was trekking to Sri Pada, (Adam’s Peak) with my grandmother in the latter part of the 1970s. I saw several buildings along the trek up to the peak where weary pilgrims stop over to take a respite from their long journey.
Back in those days, pilgrimages and carter’s travels lasted weeks or even months. These long journeys were often by foot or by cart. Each carried his or her provisions and stopped for rest at Ambalamas constructed and designed as architecturally simple buildings for providing shelter to weary travellers, free of charge. It was also a place where travellers can rest, eat, wash and possibly stay overnight.
Village Council

Ambalama is closely linked with Sri Lankan culture and embedded in their day to day-life. One of the brilliant scholars in Sri Lanka, Ananda Coomaraswamy, in his Medieval Sinhalese Art (1908) writes “the Ambalama served not only as a halting place for strangers, but was generally resorted to for exchange of news and a quiet chew.”

Coomaraswamy further pointed out that it served as a meeting place for the Village Council (Gam-sabawa), and was intimately associated with life in the village community. There were many of these Ambalamas at no great distance apart on frequent paths, says Coomaraswamy. There were better ones in each village, erected by the villagers, or by a rich person or even a woman, anxious to perform a meritorious act.

In addition, references to the wayside rests are found in ancient local texts as well as in the chronicles of British writer, traveller and prisoner of Kandyan Kings, Robert Knox. Ambalamas are also mentioned in local Sinhala folklore.

Travel itself has rapidly changed over time, and today, Ambalamas still stand along the highways reminding us of the days gone by. Recently, we had an opportunity to see one such astonishing Ambalama in the Kurunegala District. It is the Panavitiya Ambalama, situated in a sleepy village close to Matiyagane near Narammala in the Kurunegala District.
After a comfortable drive down the Negombo-Kurunegala highway, before reaching Narammala town, we turned to the left, to the road that led to the Metiyagane school junction. From there we turned left, proceeded another two and a half kilometers on the wooded Dangalla Road and reached the Ambalama, located on the right side in an archaeological reserve flat land adjoining the Lankathilakarama Viharaya at the border of a stretch of coconut land, surrounded by lush green paddy fields. On our way to the Ambalama, we asked directions several times from villagers as it is quite difficult to find your way if you are a first time visitor.

Wayside shelter
As we stopped the vehicle alongside the road opposite the Ambalama and peered out at the wooden structure standing in a cleared flat land bordering a stretch of coconut cultivation, we were disappointed. In fact, for a minute we wondered if we had come to the correct place. From where we stood we could see nothing of the wood carvings that this Ambalama was famous for.
But, it didn’t take long for us to discover its wealth of wooden wonder. As we entered the Ambalama, carvings seemed to overwhelm us, covering almost every available space. The carvings are a unique combinations of art themes.
According to historical notes, the Panavitiya Ambalama was built in the 18th century and it is believed that it may have stood as a wayside shelter for travellers on the ancient footpath leading from Dambadeniya to Kurunegala and Yapahuwa. It is constructed on a wooden platform on four rounded large stones, one foot in height raised from ground level to prevent damage from termite attacks. The roof is supported by 28 wooden pillars of which nine inner wooden pillars, six inches in height, display ornate carvings and motifs. The nineteen pillars that formed the outer posts were less elaborately carved.
One of the striking features of the Panavitiya Ambalama is a wooden pillar with a carving of entwined cobra hoods. This kind of wood carving is rare in Sri Lanka.

The Ambalama is famed for many finely carved pillars depicting majestic birds. Each pillar has its own individual carving. Besides the wildlife carvings, some pillars are carved with wrestling men, dancing women, musicians, acrobats, persons greeting each other, persons chanting, etc.
The Ambalama itself is the finest living example of Sri Lankan architecture and art showcased in wood. Almost every inch of the wooden structures is decorated with elaborate, intricate carvings on rafters and beam columns. Some of these wooden pillars have been renovated by the Department of Archaeology.
The value of the Panavitiya Ambalama lies in its elaborate carpentry work of beams and pillars. When I entered the Ambalama and observed the carvings, it reminded me of my visit to the Embekke Devale several months ago. Some of the Ambalama’s carvings bear resemblance to the ones at Embekke Devale at Davlagala in Kandy. Having observed the antiquity of the structure, we noticed that it has been repaired and reconstructed over the years. We understood that some of the wooden beams have been replaced in some places.

Walking around the site we found fragments of the small Kandyan Peti-ulu tiles at the site indicating that originally the roof was tiled with Peti-ulu. The Department of Archaeology has renovated and restored the roof, replacing it with modern tiles.
Magical place

Visiting this enchanting Ambalama, present day visitors can get a unique experience of the glory of the Dambadeniya Kingdom and some of the delightful wooden masterpieces of artistic creations of wood carvers of the bygone era.

Today, it stands as a unique monument of our ancient transport system. Perhaps, we were the only visitors to the site that day. I always wonder why visitors in Colombo never come here on a trip. Maybe they never knew this magical place even existed.

The road in front of the Ambalama is deserted and only used by the villagers. It is rarely approached by outsiders. We sat down on the huge beams of the Ambalama spending some time to enjoy a cup of tea with ‘Wandu’ a village sweet cake made with flour wrapped in ‘Kenda’ leaves, found abundantly in the wayside thickets.

(By the way, Ambalamas still exist in Colombo too. One good example is found on the Pitakotte-Ethulkotte Road, not far from the Archaeology Department Office. It has no carvings though.)