Showing posts with label தமிழர். Show all posts
Showing posts with label தமிழர். Show all posts

Friday, September 17, 2021

நினைவுச்சின்னங்கள்

வீரர்களை நினைவு கூர்ந்து நடுகல் வழிபாடு இருந்ததாக சொல்லப்படும் எமது பாரம்பரியத்தில் சினைவுச்சின்னங்கள் , நினைவுத்தூபிகள் வைப்பது என்பது எப்போது இருந்து எமது கலாசாரத்தில் இருந்து என்னால் எதுவும் உறுதியாக கூறமுடியாது ஆனாலும் பிற நாடுகளில் பல்வேறு விதமான நினைவுச்சின்னங்கள் போர் வெற்றி, முக்கிய நிகழவுகளை நினைவுபடுத்தி வைப்பதும், நாட்கள் செல்ல அவை  குறிப்பிட்ட இடங்களின் அடையாளமாகவும் மாறுகின்ற சந்தர்பங்கள் இருக்கின்றது. ஒன்றை ஒன்று பார்த்து ஒருவரைப் போல மற்றவர் செய்வது இன்று சாதாரணமானது....அந்த வகையில் நினைவுச்சின்னங்களை நாங்களும் பிரதி எடுத்த சந்தர்பங்களும் உண்டு இதனால் வரலாற்றில் நினைவுச்சின்னங்களுக்கு எப்போதும் தனியிடம் உண்டு.....

 

ஈழத்தில் காணமல் போனவர்கள் சிலருக்கு நினைவுச்சின்னம் அமைத்த காரணத்தால் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் பொலீசாரால் விசாரணை என்ற செய்தி படித்தபோது இன்னொருவிடயம் என்னுடைய கண்ணில் பட்டது. தாய் தந்தையருக்கும் நினைவுத்தூபி அமைத்துள்ளார் என்பதும், அதில் டிஎன்ஏ இன் மாதிரியும் வைக்கப்பட்டுள்ளது என்பதும் ஆகும். வழமை போல ஊடகங்கள் தங்களுக்குத் தேவையான விடயங்களை மையப்படுத்தி பல முக்கிய விடயங்களை விழுங்கி விடுவதால்....... நான் அறிந்தவற்றை பகிர்ந்து கொள்ளவே இந்தப்பதிவு.....

யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற முக்கிய நினைவுச்சின்னங்களுக்கும் மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயாவிற்கும் மிகநெருங்கிய தொடர்பு இருப்பது உங்களில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.



பல்வேறு மதரீதியான அரசியல் சர்ச்சையில் இருப்பவர் அவர் இருந்தாலும் தாய் தந்தையருக்கு நினைவுச்சின்னம் அமைத்தவர் என்ற வகையில் அவரை நேரில் சந்தித்தேன். அவர் கூறியவற்றை எனது புரிதலுடன் எழுதுகின்றேன்.



சைவ சித்தாந்தத்தில் பதி, பசு, பாசம் என்ற என்ற முப்பொருள் குறிப்பிடப்படுகின்றது. இவை அநாதி அதாவது தொடக்கமும் முடிவும் இல்லாதவை. இதில் பசுவை (உயிரை) டிஎன்ஏ என அவர் கொள்கின்றார். அதாவது டிஎன்ஏக்கும் பசுவிற்கும் (உயிருக்கும்) ஒரே இயல்பு எனக்கொண்டு தன்னுடைய நினைவுச்சின்ன வடிவமைப்பில்  டிஎன்ஏ இற்கும் ஒரு இடம் கொடுத்துள்ளார்.  மேலும்  பதியான கடவுளை நோக்கி பசு எப்போதும் நகரும் இதனை  கட்டடக்கலையில் அடி பருத்து நுனி ஒடுங்கிய வடிவில் அமைத்து வெளப்படுத்தலாம் என்று எம் முனனோர்கள் தங்களுடையடைய பல்வேறு கட்டக்கலைப்படைப்புகளில் பின்பற்றி உள்ளார்கள் அதனால் தான் வடிவமைத்த தாய் தந்தையருக்கான நினைவுத்தூபியின் உச்சியில் இந்த உத்தியைக் கையாண்டு உள்ளார்.

 

இனிச்சொல்லப்போவது ஒரு வரலாற்றுத்தகவல்.....

 



யாழ்ப்பாணத்தில் தமிழர்களின் அரசியல் பண்பாட்டு எழுச்சியில் மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயாவின் பங்கு முக்கியமானதாக இருந்திருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் 4ஆவது உலகத்தமிழராட்சி மாநாட்டை நடத்தியவர்களில் முக்கியமானவர்.....அதன் போது ஏற்பட்ட கலவரத்தில்  இறந்து போன பொதுமக்களுக்கு நினைவுத்தூபி அமைத்தவர்களில் முக்கியமானவர்.....

தந்தை செல்வா அவர்கள் இறந்தவேளை ஒரு ரூபா பெறுமதியான கொடிகள் அடித்து மக்களிடம் இருந்து 30 ஆயிரம் ரூபா பணம் சேர்த்து நினைவுத்தூபி அமைப்பதற்கு அடி எடுத்துகொடுத்தது மட்டுமல்ல....அதனை கட்டடக்கலைஞர் V.S. துரைராஜா அவர்களைக் கொண்டு வடிவமைத்து, கட்டப்பட்டுக்கொண்டு இருக்கும் வேளையில் இன்னொரு கட்டடக்லைஞரும் காந்தியவாதியுமான டேவிற் அவர்களுடைய ஆலோசனையை ஏற்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தூபியின் அளவிற்கு அதிகமாகவும், கோவில் கட்டடக்கலையில் பின்னபற்றப்படும் விமானத்தை தூபியின் உச்சியில் அமைப்பதற்கு  ஏற்பாடுகள் செய்தவர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

இந்த நினைவுத்தூபி தற்போது மீண்டும் சமயச்சிக்கலில் சிக்கி அரசியலாக மாறிக்கொண்டு இருப்பது பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது.....

 

இன்னும் ஒரு பண்பாட்டுப்புரட்சி நிகழப்போகின்றது....

 



இதுவரை காலமும் இல்லாத வகையில் 50 அடி நீள அகலம் கொண்ட கருவறை அமைத்து,  25 அடி நீள அகலம் கொண்ட முன் மண்டபம் உடைய பிள்ளையார் கோவில் கட்டப்பட்டு வருகின்றது. இந்தக் கோவிலின் கருவறை மேல்108 அடி உயரமான விமானம் கட்டப்படவுள்ளது. இங்கு வழமையான  கோவில் கட்டும்  விதி முறைகள் இல்லை....அடியார்கள் கருவறைக்குள் செல்லலாம், நேரடியாகவே பிள்ளையாருடன் கதைக்கலாம், படைக்கலாம், கும்பிடலாம். இந்தக் கோவிலுக்கு அருகில் அழகான குளம்....இதுவும் மறன்வன்புலவில் சச்சிதானந்தம் ஐயா மேற்கொண்டு வரும் பண்பாண்டுப்புரட்சிக்கான வித்து

கடட்டடக்கலைஞர். கு. பதீதரன்

Tuesday, June 6, 2017

இந்தக்கட்டடங்களின் வடிவமைப்பாளர் யார்?



தமிழர் கட்டடக்கலை என்று உரிமை கோரப்படும் எவையும் தமிழர்களுடையது அல்ல என்று சிந்திக்கதோன்றுகின்றது. 

 http://www.shunya.net/Pictures/South%20India/Tanjore/TempleNight02.jpg

சிற்ப சாத்திரம், மனையடி சாத்திரம் என்று கூறப்படும் ஏடுகளில் சொல்லப்பட்ட விடயங்களை எந்தவித வேள்விகளும் இல்லாமல் இன்றும் பின்பற்றும் சமூகம் குறித்த விடயத்தை வெறுமனே பிரதி செய்கின்றது அல்லது தங்கள் வசதிக்கு ஏற்ப நவீன முறைகளையும் பழைய முறைகளையும் இரண்iடையும் கலந்து தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர் என்பதை நாம் ஏற்கொள்ள வேண்டும்.

விடயத்திற்கு வருவோம். உண்மையில் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தஞ்சைப் பெரிய கோயில் போன்ற பிரமாண்டமான கட்டடம் ஒன்றை தமிழர்களால் கட்ட முடிந்திருக்குமானால் அதன் தொடர்ச்சியாக அந்த மக்களால் இன்றைய திகதியில் என்னவெல்லாம் கட்டியிருக்க முடியும்? ஏன் அவ்வாறு கட்டடவில்லை? அல்லது ஏன் அவ்வாறு கட்டத்தோன்றவில்லை? 

கட்டடங்கள் காலத்தைப் பிரதிபலிக்கின்றன என்பது பொதுவான உண்மை அதாவது கட்டடங்கள் எந்தக் காலப்பகுதியில் கட்டப்பட்டதோ, அக்கட்டடங்கள் குறித்த காலப்பகுதிக்குரிய கட்டுமாணத் தொழில்நுட்பம், அக்கால மக்களின் தேவை மற்றும் அதனோடு சேர்ந்த வாழ்க்கை முறை என்பன பற்றி அறியக்கூடியதாக இருக்கும். தமிழர்களின் கட்டடக்கலையில் கோயில்கள் மாத்திரமே அதிகமாக எஞ்சியிருக்கின்றது. அப்படியாயின் கோயில்களை மட்டும் கொண்டு குறித்த காலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில்நுட்ப அறிவு வாழ்க்கை முறை என்பவற்றை அறிய முடியுமா? அவ்வாறான ஒரு சமூகத்தை 500 வருடங்களுக்கு முன்னர் வந்த ஐரோப்பியர்கள் அடிமைகளாக மாற்ற முடிந்திருக்குமா?

சரி தமிழர்களின் கோவில் கட்டடக்லை தற்போதைய தழிர்களுடையது அல்ல என்பதை ஏற்றுக்கொண்டால். யார அவற்றை செய்தார்கள்? ஏன் அவற்றை செய்தார்கள்? கட்டடக்கலை சார் நூலானது மாயன் நூல் என்று சொல்லப்படுகின்றது, அப்படியாயின் குறித்த கட்டடங்கள் மாயன்களால் கட்டிக்கொடுக்கப்பட்டதா? அல்லது முன்பு இந்தப்பகுதியில் மாயன்கள் தான் வசித்து வந்தார்களா? மாயன்களும் தமிழர்களும் ஒன்றா? தற்போது மயனகளுடையது என்று சொல்லப்படும் கட்டடங்களுக்கும் தமிழ்ர்களுடைய கட்டடங்களுக்கும் ஒத்திசைவுகள் இல்லை அதனால் குறித்த கட்டடங்கள் வேற்றுக்கிரகங்களில் இருந்து வந்தவர்களும் தமிழர்களும் இணைந்து செய்த வேலைகளா? இவை எல்லாம் விடை காணவேண்டிய கேள்விகள்.

குமாரலிங்கம் பதீதரன்
கட்டடக்கலைஞர்

Saturday, April 8, 2017

1,400 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டீஸ்:

நாடு முழுவதும் 100 நகரங்களை பொலிவுறு நகரங்களாக (ஸ்மார்ட் சிட்டீஸ்) மாற்றுவதற்கான தொடர் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது மத்திய அரசு. ஆனால், 1,400 வருடங்களுக்கு முன்பே பல்லவர்கள் ஆட்சியில் பொலிவுறு நகரங்கள் உருவாக்கப்பட்டதை கூரம் செப்பேடு தெளிவாக விவரிக்கிறது.
கி.பி. 550 முதல் 560 வரையில் காஞ்சியை ஆண்ட முதலாம் பர மேஸ்வரவர்மன் தனது பெயரில் பரமேஸ்வரமங்கலம் என்ற பொலிவுறு நகரை உருவாக்கினான். அப்போது கடைபிடிக்கப்பட்ட நெறிமுறை அலகுகளை கூரம் செப்பேடு விவரிக்கிறது.
விவசாய உற்பத்திக்கு ஏற்ற மண்வளம், நிரந்த நீர் மேலாண்மை திட்டம், தண்ணீர் பகிர்மான அல குகள், கட்டுமானத்துக்கு ஏற்ற தரமான மண் வள பகுதி, கோயில் மண்டபம், நிரந்தர வைப்புக்காக வழங்கப்பட்ட தானங்கள் இவற்றோடு வணிக பெருமக்கள், கருவிகள் தயாரிப்போர், அறிவுசார் பெருமக்கள் ஆகியோருக்கான வசதிகள் இவை அனைத்தும் பொலிவுறு நகர் உருவாக்கத்தின் போது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது அரக்கோணம் அரு கில் உள்ள பரமேஸ்வரமங்கலத்தை பொலிவுறு நகராக வடிவமைப்ப தற்காக 6300 (98.44 ஏக்கர்) குழி நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்ட து. இந்த நகரை உருவாக்கும் பொறுப்பு உத்தரகாணிகா மகா சேசன் தத்தன் என்ற ஆணத்தியி டம் தரப்பட்டது. பொலிவுறு நகரில் முதலில் பரமேஸ்வர தடாகம் என்ற ஏரி வெட்டப்பட்டது. அதற்கு தேவையான நீர் இருப்புக்காக பாலாற்றில் இருந்து பெரும்பிடுகு என்ற கால்வாய் வெட்டப்பட்டது.

இங்கு தண்ணீரைப் பயன்ப டுத்தும் பகிர்மான உரிமைகள் அனைத்தும் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டதால் தண்ணீர் தாவாக்கள் தவிர்க்கப்பட்டன. கட்டுமானங்களுக்குத் தேவையான செங்கற்களை உற்பத்தி செய்வ தற்காகவே சூளைமேட்டுப்பட்டி என்ற பகுதி உருவாக்கப்பட்டது.
ஆன்மிக திருவிழாக்கள் மூலம் மக்களை ஒற்றுமைப்படுத்த முடியும் என்பதால் பொலிவுறு நகரில் முதலில் கோயில் எழுப் பப்பட்டது. ஊருக்கு நடுவில், பாரதம் வாசிக்கும் மண்டபம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இது நீதிக் கதைகளைச் சொல்லி மக்களை நல்வழிப்படுத்தும் இடமாகவும் அரசின் ஆணைகள், சட்டதிட்டங்களை மக்களுக்குச் சொல்லும் ஊடக மையமாகவும் செயல்பட்டன. வணிகர்கள், பொற்கொல்லர்கள், அறிவுசார் பெருமக்கள், மருத்துவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நகரின் முக்கிய பகுதிகளில் இடம் ஒதுக்கப்பட்டது. உலக வணிகர்கள் வர்த்தகம் செய்வதற்கான பாது காப்பான வழிமுறைகளும் ஏற்ப டுத்தப்பட்டன.

இதுகுறித்து மேலும் தகவல்க ளைத் தந்த வரலாற்று ஆய்வாள ரும் சேலம் ஆத்தூர் அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியருமான ஜெ.ஆர்.சிவராம கிருஷ்ணன், ‘‘கூரம் செப்பேடு 7 ஏடுகளை (14 பக்கங்கள்) கொண் டது. இதில் 10 பக்கங்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன. 4 பக்கங்கள் தமிழில் உள்ளன. இதில்தான் பரமேஸ்வரமங்கலம் உருவாக்கப்பட்ட விதம் விவரிக் கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதலாவது பொலிவுறு நகரங்களாக மொகஞ்சதாரோ, ஹரப்பாவை சொல்லலாம். அகன்ற வீதிகள், வீடுதோறும் குளியலறைகள், பாதாளச் சாக்கடைகள், மழை நீர் சேகரிப்பு உள்ளிட்ட இப்போது நமது விவாதத்தில் இருக்கும் அத்தனை வசதிகளும் இந்நகரங்களில் இருந் தன. அதேபோல், சங்ககால தமிழர்களின் பொலிவுறு நகர நிர்மாணத்துக்கு எடுத்துக்காட்டு மதுரை. தாமரை மலரின் வடிவத் தைக் கொண்ட மதுரை நகரில் தெருக்கள் ஆறுகளைப் போல நீண்டும் அகன்றும் இருந்ததை ‘ஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெ ரு’ என்று புகழ்கிறது பரிபாடல். பரமேஸ்வரமங்கலமும் இத்தகைய சிறப்பு அம்சங்கள் அனைத்தும் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது’’ என்றார்.

http://m.tamil.thehindu.com/tamilnadu/1400-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8649213.ece

Friday, December 16, 2016

தமிழர் - கலை - பண்பாடு

இந்த தலைப்பில் மூன்று விடயங்கள் உள்ளடங்கியுள்ளன. இவற்றில் எல்லா இனங்களுக்கும் உள்ள இரண்டு பொதுவான விடயங்களான கலை மற்றும் பண்பாடு ஆனது மூன்றாவது விடயமான தமிழர் என்ற இனம் என்பதோடு மட்டும் இணைத்துப் பார்க்கப்படுகின்றது. இங்கு சொல்லப்படுகின்ற மூன்று விடயங்களையும் தனித்தனியே பார்க்க வேண்டும். அதாவது தமிழர் -கலை-பண்பாடு என்பவற்றை தனித்தியான ஆராய்ந்தால் மடடுமே முழுவதையும் இணைத்துப்பார்க்க முடியும்.

முதலில் தமிழர் என்பதை எடுத்துக்கொண்டால் இங்கு எழும் முக்கிய பிரச்சனை தமிழர்களை எவ்வாறு வரையறுப்பது. தமிழ் மொழி பேசுபவர்கள் அனைவரும் தமிழர்களா? அல்லது எந்த மொழி பேசினாலும் அம்மக்களின் மரபணு பண்புகளில் இருந்து தமிழர்களை வரையறுப்பதா?
அல்லது வரலாற்று ரீதியாக தமிழர்களாக இருந்து பல்வேறு நாடுகளில் தமிழ் மொழி தெரியாது வாழும் தமிழ் வம்சாவளியில் வந்தவர்களை குறிப்பிடுவதா? மனிதர்கள் தோன்றிய காலம் முதல் தமிழ் என்ற மொழி பேசும் இனம் தோன்றியது என்று வைத்துக்கொண்டால் ஆதியில் பிறந்த தமிழர்கள் எல்லோரும் இன்று அப்படியோ இருக்கிறார்களாபூமியின் சுழற்சி அதனால் ஏற்பட்ட காலநிலை மாற்றம், இடப்பெயர்வு, அன்னியராட்சி போன்ற பல்வேறு காரணங்களால் இன்று குறித்த இனம் மடடுமல்ல அநேகமான மனித இனங்கள் எல்லாம் இந்த உலகம் மட்டுமல்ல பிரபஞ்சம் முழுவதுமே இருப்பார்கள் என்பதை சாதாரண அறிவு படைத்த எவருமே ஏற்றுக்கொள்வார்கள். அப்படியாயின் தமிழர்கள்  என்று யாரைக்குறிப்பது?
தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களின் மூதாதையர்கள் ஆபிரிக்ககண்டத்தில்  இருந்து வந்தவர்கள் என்று அண்மைக்கால மரபணுப் பரிசோதனைகள் சொல்வதாக கூறப்படுகின்றது. இதே வேளை இலங்கையில் பல்வேறு அரசியல் இராணுவத் தேவைகளுக்காக பல்வேறு இன மொழி பேசியவர்கள் தமிழ் மொழியைப் பேசி, தமிழ் பேசியவர்களை திருமணம் செய்தும், தமிழர் பண்பாடுகள் என்று கூறப்படுபவைகளைப் பின்பற்றியும் வாழ்கின்றமையை அவதானிக்கலாம். இவ்வாறான போக்கு கடந்த 500 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது இன்று யார் தமிழர்கள் என்பது வரையறுக்க முடியாத சூழ்நிலையே காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் கலை என்பதை எடுத்துக்கொண்டால்,
கலைகளின் தோற்றத்தைப் பார்க்கும் போது வேட்டையாடிய மனிதன் தன்னுடைய வேட்டை அனுபவத்தை ஏனையவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதற்காக சித்திரங்களை வரைந்ததாகவும், ஓய்வு சேரங்களில் ஆடல் பாடல்களில் ஈடுபட்டதாகவும் வரலாறு சொல்கின்றது. அந்த மனித இனம் தமிழ் பேசியதாக வைத்துக்கொண்டால்இன்று தமிழ் பேசும் அல்லது தமிழர் என்று சொல்லப்படும் ஒருவர் ஏற்பட்ட கால மாற்றத்தால் ஒவியத்துறையில் அல்லது ஏனைய கலைத்துறையில் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களை, சிந்தனைகளை உள்வாங்கி தன்னுடைய படைப்புக்களை உருவாக்குவதை தமிழ்நாட்டிலேயே காணக்கூடியதாக உள்ளது. இதற்கு மேலாக இன்று ஐரோப்பிய சூழலில் வாழும் தமிழ் பேசும் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய படைப்புக்களை ஒரு கலைப்படைப்பு என்ற அடைப்படையிலேயே நோக்கின்றார். ஆதனை எந்தச் சந்தர்பத்திலும் தமிழ் அல்லது தமிழருடைய படைப்பு  என்று பார்ப்பதில்லை. இன்று உலகில் ஏற்பட்டிருக்கும் சிந்தனை மாற்றம் அநேகமாக எல்லாவிதமான கலைப்படைப்புகளையும் கலை என்ற கோணத்தில் மட்டும் பார்க்கும் போக்கு காணப்படுகின்றது. உலகம் தகவல் தொழில்நுட்ப புரட்சியை உள்வாங்கிய பின்னர் மனித மனங்களில் ஏற்பட்ட சிந்தனை மாற்றம் சில மனிதக்குழுக்களுக்குரிய கலைகளை பாரம்பரிய அல்லது நாட்டுப்புற கலைவடிவம் என்ற வகையில் வகைப்படுத்தி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் தமிழர்களின் கலை என்று கூறி நாம் பாதுகாக்கும் ஒன்றை தொடர்ந்து பேணிப்பாதுகாப்பது ஒரு கலைஞனின் ஆற்றலை அல்லது வளர்ச்சியைமட்டுப்படுத்துவது போன்ற செயற்பாடு என்ற எண்ணமே தோன்றுகின்றது.

அடுத்த விடயம் பண்பாடு
ஒரு விலங்கின் நடத்தை என்பது குறித்த விலங்கு வாழும் சூழ்நிலை, அந்த சூழலின் தரைத்தோற்றம், காலநிலை என்பவற்றின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டது. உதாரணமாக இந்தியா இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் நிலவும் காலநிலைக்கு குறித்த மக்களின் உணவுப்பழக்கம் மற்றும் ஆடை அலங்காரங்கள் தோன்றின, அவை தொடர்நதும் பின்பற்றப்பட்டன. காலப்போக்கில் உலக வர்த்தகம் விரிவடைய பிறநாடுகள் மேற்கொண்ட ஆக்கிரமிப்புக்கள் மக்களின் உணவுப்பழக்கம், ஆடை அலங்காரங்களில் மாற்றத்தை ஏற்படுத்தின. இக்காலப்பகுதியில் மக்களின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மக்களின் நீண்ட காலப்பழக்க வழங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தின. இவ்வாறான மாற்றங்கள் தமிழர் என்று  சொல்லப்படும் மக்களின் வாழ்வில் கடந்த 200 வருடங்களில் பாரிய மாற்றம் ஏற்பட்டன. பாரிய அளவில் ஏற்படுத்தப்பட்ட கட்டாயக்குடிஏற்றங்கள், பாதுகாப்பிற்கான இடப்பெயர்வுகள், தொழில் ரீதியான இடப்பெயர்வுகள் எல்லாம் மக்களின் பழக்க வழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி தொடர்ச்சியாக பண்பாட்டில் மாற்ங்களை ஏற்படுத்தின. முன்னைய தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட தமிழ் மக்களின் பண்பாடு என்பது இன்றைய தமிழ் மக்களின் பண்பாடு எனப்படுவதோடு பாரிய வேறுபாடுகளை காட்டிநிற்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் எழுகின்ற முக்கிய கேள்வி என்னவெனில்  இன்றைய தொழில்நுட்பம், தொடர்பாடல்கள் இல்லாத ஒரு காலகட்டத்தில் அதாவது இன்றைய காலத்திற்கு முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் தோன்றிய ஒரு வாழ்க்கை முறையை ஒரு இனத்தின் அடையாளம் அல்லது பாரம்பரியம் என்ற பெயரில் அதனைப்பாதுகாக்க வேண்டுமா? இன்றைக்கு 10 வருடங்களிற்கு முன்னர் வந்த சாதாரண கைத்தொலைபேசியை எந்த மனித இனத்தைச் சேர்ந்த ஒருவருமே உபயோகப்படுத்துவதற்கு ஆர்வம் காட்டுவது கிடையாது. ஏனெனில் அவ்வாறான கைத்தொலைபேசிகள் இன்று பயன்பாட்டிற்கு தேவையான வசதிகளை கொண்டிருக்கவில்லை என்பதே காரணம்.

இனி தமிழர் கலை பண்பாடு என்ற விடயத்தை முழுமையாக நோக்கினால் தமிழ் பேசுக்கின்ற ஒரு மக்கள் கூட்டம் தங்களுடைய கலை பண்பாடு என்று உறுதியாக வரையறுக்க முடியாத சில வரையறைகளுக்குள் மட்டும் தங்களை மட்டுப்படுத்திக்கொள்ள வேண்டுமா? என்ற கேள்வி எழுகின்றது. இன்று எம்மத்தயில் காணப்படுகின்ற சட்டங்கள் சாதாரண மக்களுக்கு மட்டும் பிரயோகிக்கப்படுகின்ற அதேவேளை குறித்த சட்டத்தை அமுல்படுத்த வேண்டியவர்கள் குறித்த சட்டங்களை மீறி செயலாற்றுவது போல் தமிழ் பேசும் மக்களில்ஒரு சிலர் மட்டும் நிகழும் சமூக மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தாங்கள் சிறுவயதில் இருந்து புகுத்தப்பட்ட சில கலை பண்பாடு அதனைக் காப்பாற்றவும், பேணிப்பாதுகாக்கவும் முற்பட்டு அதனை முழுமையாக செய்யாது மனதளவில் துன்பத்திற்கு உள்ளாவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.


தமிழர்கள் எனச்சொல்லப்பபடும் மக்கள் கூட்டம் உலகில் மாற்றங்கள் ஏற்படுவதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து ஏனைய தங்களை இந்த பூமியில் தக்க வைக்கவேண்டும் அதற்கான செயற்பாடுகள் அவசியம். துமிழர் கலை உயர்ந்தது, பண்பாடு சிறந்தது என நம்புவர்கள் அதனைப் பின்பற்றி வாழ்ந்து உயர்ந்து காட்டவேண்டும். இது இவ்வாறு இருக்க யாதும் ஊரே யாவரும் கேளீர் அன்பே சிவம் போன்ற தமிழ்ச் சொற்கள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.