Tuesday, June 6, 2017

இந்தக்கட்டடங்களின் வடிவமைப்பாளர் யார்?



தமிழர் கட்டடக்கலை என்று உரிமை கோரப்படும் எவையும் தமிழர்களுடையது அல்ல என்று சிந்திக்கதோன்றுகின்றது. 

 http://www.shunya.net/Pictures/South%20India/Tanjore/TempleNight02.jpg

சிற்ப சாத்திரம், மனையடி சாத்திரம் என்று கூறப்படும் ஏடுகளில் சொல்லப்பட்ட விடயங்களை எந்தவித வேள்விகளும் இல்லாமல் இன்றும் பின்பற்றும் சமூகம் குறித்த விடயத்தை வெறுமனே பிரதி செய்கின்றது அல்லது தங்கள் வசதிக்கு ஏற்ப நவீன முறைகளையும் பழைய முறைகளையும் இரண்iடையும் கலந்து தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர் என்பதை நாம் ஏற்கொள்ள வேண்டும்.

விடயத்திற்கு வருவோம். உண்மையில் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தஞ்சைப் பெரிய கோயில் போன்ற பிரமாண்டமான கட்டடம் ஒன்றை தமிழர்களால் கட்ட முடிந்திருக்குமானால் அதன் தொடர்ச்சியாக அந்த மக்களால் இன்றைய திகதியில் என்னவெல்லாம் கட்டியிருக்க முடியும்? ஏன் அவ்வாறு கட்டடவில்லை? அல்லது ஏன் அவ்வாறு கட்டத்தோன்றவில்லை? 

கட்டடங்கள் காலத்தைப் பிரதிபலிக்கின்றன என்பது பொதுவான உண்மை அதாவது கட்டடங்கள் எந்தக் காலப்பகுதியில் கட்டப்பட்டதோ, அக்கட்டடங்கள் குறித்த காலப்பகுதிக்குரிய கட்டுமாணத் தொழில்நுட்பம், அக்கால மக்களின் தேவை மற்றும் அதனோடு சேர்ந்த வாழ்க்கை முறை என்பன பற்றி அறியக்கூடியதாக இருக்கும். தமிழர்களின் கட்டடக்கலையில் கோயில்கள் மாத்திரமே அதிகமாக எஞ்சியிருக்கின்றது. அப்படியாயின் கோயில்களை மட்டும் கொண்டு குறித்த காலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில்நுட்ப அறிவு வாழ்க்கை முறை என்பவற்றை அறிய முடியுமா? அவ்வாறான ஒரு சமூகத்தை 500 வருடங்களுக்கு முன்னர் வந்த ஐரோப்பியர்கள் அடிமைகளாக மாற்ற முடிந்திருக்குமா?

சரி தமிழர்களின் கோவில் கட்டடக்லை தற்போதைய தழிர்களுடையது அல்ல என்பதை ஏற்றுக்கொண்டால். யார அவற்றை செய்தார்கள்? ஏன் அவற்றை செய்தார்கள்? கட்டடக்கலை சார் நூலானது மாயன் நூல் என்று சொல்லப்படுகின்றது, அப்படியாயின் குறித்த கட்டடங்கள் மாயன்களால் கட்டிக்கொடுக்கப்பட்டதா? அல்லது முன்பு இந்தப்பகுதியில் மாயன்கள் தான் வசித்து வந்தார்களா? மாயன்களும் தமிழர்களும் ஒன்றா? தற்போது மயனகளுடையது என்று சொல்லப்படும் கட்டடங்களுக்கும் தமிழ்ர்களுடைய கட்டடங்களுக்கும் ஒத்திசைவுகள் இல்லை அதனால் குறித்த கட்டடங்கள் வேற்றுக்கிரகங்களில் இருந்து வந்தவர்களும் தமிழர்களும் இணைந்து செய்த வேலைகளா? இவை எல்லாம் விடை காணவேண்டிய கேள்விகள்.

குமாரலிங்கம் பதீதரன்
கட்டடக்கலைஞர்

No comments:

Post a Comment