Showing posts with label மனையடி சாத்திரம். Show all posts
Showing posts with label மனையடி சாத்திரம். Show all posts

Tuesday, May 28, 2019

வ.ந.கிரிதரனின் கட்டடக்கலைக்குறிப்புகள்: லூயிஸ் சல்லிவனின் (Louis Sullivan) செயற்பயனைத் தொடரும் வடிவம் (Form follows function)


- லூயிஸ் சல்லிவன்-
ஒரு கட்டடத்தின் அல்லது பொருளொன்றின் வடிவமானது அக்கட்டடம் அல்லது அப்பொருள் எக்காரணத்துக்காகப் பாவிக்கப்படுகின்றதோ அக்காரணத்துக்கேற்ப பொருத்தமான வடிவமொன்றினைப்பெறும். அதாவது அக்கட்டடம் அல்லது அப்பொருளின் செயற்பயனுக்கேற்ப அவற்றின் வடிவமுமிருக்கும். இதனைத்தான் வடிவம் செயற்பயனைத்தொடர்தல் (Form follows function) என்னும் கூற்று வெளிப்படுத்துகின்றது. இக்கருதுகோள் அல்லது சிந்தனை் அல்லது விதி இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவக் கட்டடக்கலையின் அல்லது தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும் பொருளொன்றின் வடிவமைப்பில் முக்கியமானதொரு கருதுகோளாகும்.

இக்கோட்பாட்டின் காரணகர்த்தா புகழ்பெற்ற அமெரிக்கக் கட்டடக்கலைஞர்களில் ஒருவரான கட்டடக்கலைஞர் லூயிஸ் சல்லிவன் ( Louis Sullivan) ஆவார். ஆயினும் பொதுவாக இக்கோட்பாட்டின் காரணகர்த்தாவாகத் தவறாகச் சிற்பி ஹொரதியொ கிறீனோ , Horatio Greenough (1805 – 1852) , குறிப்பிடப்பட்டாலும் அது தவறானது. சிற்பி ஹொரதியொ கிறீனோவை இவ்விதம் குறிப்பிடுவதற்குக் காரணம் அவரது கட்டுரைகளின் தொகுதியொன்று 'வடிவமும், செயற்பயனும்: கலை மீதான ஹொரதியோ கிறீனோவின் குறிப்புகள்' (Form and Function: Remarks on Art by Horatio Greenough.) என்னும் பெயரில் வெளிவந்ததாகும். ஆயினும் வடிவமானது எப்பொழுதுமே செயற்பயனைத் தொடரும் என்னும் கூற்றினை முதன் முதலில் பாவித்தவராகக் கட்டடக்கலைஞர் லூயிஸ் சல்லிவனைத்தான் குறிப்பிட வேண்டும்.

தேரோ , எமர்சன், மெல்வில் போன்றோரின் பகுத்தறிவுச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட லூயிஸ் சல்லிவன் சிற்பி ஹொரதியோ கீறினோவுக்குப் பல வருடங்களுக்குப் பின் பிறந்தவர். அவர் 1896இல் எழுதிய 'கலைத்துவ அடிப்படையிலான உயர்ந்த ஆபிஸ் கட்டடம்' (The Tall Office Building Artistically Considered) என்னும் கட்டுரையில் இக்கருதுகோளினை முதன் முதலாகப் பாவித்திருகின்றார். இருந்தாலும் தனது இக்கருதுகோளுக்குக் காரணமானவராக அவர் கி.மு 80–70 காலகட்டத்தில் பிறந்து கி.மு 15 ஆண்டளவில் இறந்த புகழ்பெற்ற ரோமன் கட்டடக்கலைஞரான மார்க்கஸ் வேர்ட்ருவியஸ் பொலியோ (Marcus Vitruvius Pollio) என்பவரைப் பின்னொரு சமயம் குறிப்பிட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மார்க்கஸ் வேர்ட்ருவியஸ் பொலியோ புகழ்பெற்ற 'கட்டடக்கலைபற்றி' என்னும் அர்த்தத்திலான De architectura என்னும் கட்டடக்கலை பற்றிப் பத்துத் தொகுதிகள் அடங்கிய நூலொன்றினை எழுதியிருக்கின்றார். கு.மு. காலகட்டத்தில் எழுதப்பட்ட அந்நூலானது கட்டடக்கலை வரலாற்றில் மிகவும் முக்கியமானதோரு நூலாகக் கருதப்படுகின்றது. இந்நூலில் அவர் கட்டடமொன்றின் அமைப்பானது திடம், பயன் மற்றும் அழகு (firmitas, utilitas & venustas) ஆகிய மூன்று முக்கியமான பண்புகளை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.


- வெயின்ரைட் (The Wainwright Building ) கட்டடம் -
கட்டடக்கலைஞரான லூயிஸ் சல்லிவன் 'வடிவமானது எப்பொழுதும் அதன் செயற்பயனைத் தொடரும்' (form ever follows function) என்ற கூற்றினைத்தான் தனது 'கலைத்துவ அடிப்படையிலான உயர்ந்த ஆபிஸ் கட்டடம்' என்னும் கட்டுரையில் பாவித்திருந்தாலும், அக்கூற்றே காலப்போக்கில் எளிமைப்படுத்தப்பட்டு 'வடிவம் அதன் செயற்பயனைத் தொடரும்' (form follows function) என்று பரிணாமடைந்து கட்டடக்கலை உலகில் நிலைத்து நின்று விட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் உருக்கினாலான உயர்ந்த கட்டடங்களுக்குரிய வடிவினை உருவாக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வழக்கிலிருந்த பாணிகளை மீறிப் புதிய பாணிகளைச் சூழல் வேண்டி நின்ற வேளையில் , கட்டடமொன்றின் வடிவமானது பழைய கோட்பாடுகளின் அடிப்படையில் (form follows precedent) தெரிவு செய்யப்பட-போவதில்லையென்றால் , கட்டடமொன்றின் வடிவமானது அக்கட்டடத்தின் நோக்கத்துக்கேற்ப , செயற்பயனுக்கேற்பத் (form follows function) தெரிவு செய்யப்பட வேண்டுமென்று லூயிஸ் சல்லிவன் கருதினார். 'செயின்ற்' (புனித) லூயிஸ், மிசூரியிலுள்ள லூயிஸ் சல்லிவன் வடிவமைத்த வெயின்ரைட் (The Wainwright Building ) கட்டமானது அவரது 'வடிவம் செயற்பயனைத் தொடரும்' கருதுகோளினை வெளிப்படுத்தி நிற்கும் முக்கியமான கட்டடங்களிலொன்றாகும்.
* function என்னும் ஆங்கிலச்சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உள்ளன. ஒரு கட்டடமொன்றின் function என்னும்பொது அது செயற்படுகையில் அதன் பயன் என்னும் அர்த்தத்தைக் கொள்ளலாமென்பதன் அடிப்படையில் இங்கு 'செயற்பயன்' என்னும் சொல்லினைப் பாவித்துள்ளேன்.

'செயின்ற்' (புனித) லூயிஸ், மிசூரியிலுள்ள லூயிஸ் சல்லிவன் வடிவமைத்த வெயின்ரைட் (The Wainwright Building ) கட்டடமானது அவரது 'வடிவம் செயற்பயனைத் தொடரும்' கருதுகோளினை வெளிப்படுத்தி நிற்கும் முக்கியமான கட்டடங்களிலொன்றாகும். - 'செயின்ற்' (புனித) லூயிஸ், மிசூரியிலுள்ள லூயிஸ் சல்லிவன் வடிவமைத்த வெயின்ரைட் (The Wainwright Building ) கட்டடம். -

ngiri2704@rogers.com

நன்றி: http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4380:-4-louis-sullivan-form-follows-function&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54

https://vngiritharan230.blogspot.com/2018/02/4-louis-sullivan-form-follows-function.html#more

Tuesday, June 6, 2017

இந்தக்கட்டடங்களின் வடிவமைப்பாளர் யார்?



தமிழர் கட்டடக்கலை என்று உரிமை கோரப்படும் எவையும் தமிழர்களுடையது அல்ல என்று சிந்திக்கதோன்றுகின்றது. 

 http://www.shunya.net/Pictures/South%20India/Tanjore/TempleNight02.jpg

சிற்ப சாத்திரம், மனையடி சாத்திரம் என்று கூறப்படும் ஏடுகளில் சொல்லப்பட்ட விடயங்களை எந்தவித வேள்விகளும் இல்லாமல் இன்றும் பின்பற்றும் சமூகம் குறித்த விடயத்தை வெறுமனே பிரதி செய்கின்றது அல்லது தங்கள் வசதிக்கு ஏற்ப நவீன முறைகளையும் பழைய முறைகளையும் இரண்iடையும் கலந்து தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர் என்பதை நாம் ஏற்கொள்ள வேண்டும்.

விடயத்திற்கு வருவோம். உண்மையில் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தஞ்சைப் பெரிய கோயில் போன்ற பிரமாண்டமான கட்டடம் ஒன்றை தமிழர்களால் கட்ட முடிந்திருக்குமானால் அதன் தொடர்ச்சியாக அந்த மக்களால் இன்றைய திகதியில் என்னவெல்லாம் கட்டியிருக்க முடியும்? ஏன் அவ்வாறு கட்டடவில்லை? அல்லது ஏன் அவ்வாறு கட்டத்தோன்றவில்லை? 

கட்டடங்கள் காலத்தைப் பிரதிபலிக்கின்றன என்பது பொதுவான உண்மை அதாவது கட்டடங்கள் எந்தக் காலப்பகுதியில் கட்டப்பட்டதோ, அக்கட்டடங்கள் குறித்த காலப்பகுதிக்குரிய கட்டுமாணத் தொழில்நுட்பம், அக்கால மக்களின் தேவை மற்றும் அதனோடு சேர்ந்த வாழ்க்கை முறை என்பன பற்றி அறியக்கூடியதாக இருக்கும். தமிழர்களின் கட்டடக்கலையில் கோயில்கள் மாத்திரமே அதிகமாக எஞ்சியிருக்கின்றது. அப்படியாயின் கோயில்களை மட்டும் கொண்டு குறித்த காலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில்நுட்ப அறிவு வாழ்க்கை முறை என்பவற்றை அறிய முடியுமா? அவ்வாறான ஒரு சமூகத்தை 500 வருடங்களுக்கு முன்னர் வந்த ஐரோப்பியர்கள் அடிமைகளாக மாற்ற முடிந்திருக்குமா?

சரி தமிழர்களின் கோவில் கட்டடக்லை தற்போதைய தழிர்களுடையது அல்ல என்பதை ஏற்றுக்கொண்டால். யார அவற்றை செய்தார்கள்? ஏன் அவற்றை செய்தார்கள்? கட்டடக்கலை சார் நூலானது மாயன் நூல் என்று சொல்லப்படுகின்றது, அப்படியாயின் குறித்த கட்டடங்கள் மாயன்களால் கட்டிக்கொடுக்கப்பட்டதா? அல்லது முன்பு இந்தப்பகுதியில் மாயன்கள் தான் வசித்து வந்தார்களா? மாயன்களும் தமிழர்களும் ஒன்றா? தற்போது மயனகளுடையது என்று சொல்லப்படும் கட்டடங்களுக்கும் தமிழ்ர்களுடைய கட்டடங்களுக்கும் ஒத்திசைவுகள் இல்லை அதனால் குறித்த கட்டடங்கள் வேற்றுக்கிரகங்களில் இருந்து வந்தவர்களும் தமிழர்களும் இணைந்து செய்த வேலைகளா? இவை எல்லாம் விடை காணவேண்டிய கேள்விகள்.

குமாரலிங்கம் பதீதரன்
கட்டடக்கலைஞர்

Sunday, January 1, 2017

ஆர்கிடெக்சர் - Architecture

கட்டிடங்களையும், இதர கட்டுமானங்களையும் வடிவமைப்பது பற்றிய படிப்பு தான் ஆர்கிடெக்சர். இந்த படிப்பின் பின்னர் பி.ஆர்க் பட்டம் வழங்கப்படும். இந்த படிப்பு ஐந்து ஆண்டுகள் கொண்டது. இந்த படிப்பு தொழில்நுட்பத்தையும், அறிவியலையும் கலந்து பயன்பாட்டில் எடுத்துக் கொண்டு, கட்டமைப்பில் எவ்வகை மாற்றங்களை கொண்டு வரலாம் என திட்டமிட்டு வடிவமைப்பை உருவாக்கப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் பெயரும் நிலைத்து, பார்க்கும் வேலைக்கு தகுந்தாற்போல் பணமும் பார்க்க வேண்டும் என்பவர்களின் சரியான தேர்வு  கட்டிட வடிவமைப்பியல் படிப்பு. மேலும், ஆர்கிடெக்சர் படிப்பவர்களுக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் இருக்கிறது. இந்த படிப்பு இந்தியாவில் மிக சில கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களில் தான் இருக்கிறது. அதனால் இந்த படிப்பில் சேர போட்டி போட வேண்டி இருக்கும்.

இந்த படிப்பில் சேர, தனியே நுழைவு தேர்வு எழுத வேண்டும். அதில் பெறும் மதிப்பெண் மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் பெறும் மதிப்பெண் இரண்டில் அடிப்படையில் தான் சேர்க்கை நடைபெறுகிறது. பிளஸ் டூ தேர்வு முடிந்தவுடனோ அல்லது அதற்கு முன்னதாகவோ கவுன்சில் பார் ஆர்கிடெக்சர் அமைப்பு நடத்தும், தேசிய அளவிலான திறனறிவு தேர்வு  எழுத வேண்டும். இந்த திறனறிவு தேர்வு, எப்போது வேண்டுமானாலும், விண்ணப்பித்து நுழைவு தேர்வு எழுதலாம். நுழைவு தேர்வில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. ஒன்று சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்கும் முறை(அப்ஜக்டிவ் டைப்).  இதில், பொது அறிவு வினாக்களோடு, கட்டிட கலையின் வரலாற்று சார்ந்த விஷயங்களும் கேட்கப்படும். இரண்டாவது மாணவரின் வரையும் திறனையும், கற்பனை திறனையும், சோதித்தறியப்படும் வகையிலான டிராயிங் தேர்வு.

உங்களுடைய படைப்பாற்றலையும், வடிவமைப்பு திற¬னையும் வெளிகாட்டுவதற்கு இதைவிட சரியான படிப்பு வேறு ஒன்றுமில்லை. கட்டுமானத்தை அழகுற திட்டமிடுவதும், வடிவமைப்பு கொடுப்பதும் தான்.  எப்படி ஒரு கவிஞன் தன்னுடைய எண்ணத்தை கவிதையாக எழுதுகிறானே, அதைப்போலவே, கட்டிட கலைஞன் தன்னுடைய கற்பனையை வரைந்து, அதற்கு உருவம் கொடுக்கும் கலை தான் கட்டிட கலை.

கட்டிடவியல் வடிவமைப்பாளர், கட்டுமான இடத்தில் என்னென்ன புதுமைகளை புகுத்த முடியும், அதற்கு எவ்வளவு செலவாகும், எவ்வளவு இடம் தேவைப்படும், எவ்வளவு பொருட்கள் தேவைப்படும்,  கட்டிடதிற்கு எவ்வளவு காற்றோட்டமும், வெளிச்சமும் கிடைக்கும் என்று பல விஷயங்களையும் உள்வாங்கி கட்டுமானத்தை திட்டமிடுகிறார்கள்.

இத்துறையில் புராதன கட்டிடங்கள் காப்பது, கிரீன் பில்டிங் வடிவமைப்பு, நகர வடிவமைப்பு, நகர திட்டமிடல், கட்டிட வெளி புல்வெளி அமைப்பு என பல்வேறு பிரிவுகளாக இருக்கிறது.
இப்போது எங்கு பார்த்தாலும் நகரமயமாகி வருவதால் ஆர்கிடெக்சர் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு பெரிய அளவில் இருக்கிறது.  மேலும், நகரத்தில் எங்கு பார்த்தாலும் வியாபார தளங்களும், அடுக்குமாடி குடியிருப்புகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள் என அதிகரித்து வருகின்றன. இதனால் கட்டுமான வடிவமைப்பில் வேலை வாய்ப்பு என்பது எந்த விதமான சிரமம் இல்லாமல் கிடைத்துவிடும். ஒரு குறிப்பிட்ட காலம் வேலை செய்த பின்பு, தனியே வடிவமைப்பாளராக களம் இறங்கி லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். பெரிய அளவில் தேவை இருக்கிறது. அதே போல் வடிவமைப்புக்கு அதிகளவில் சம்பாதிக்கவும் வாய்ப்புகள் ஏராளம். குறைந்தது 2 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் வரை ஆண்டு சம்பளமாக வாங்குகிறார்கள். பழங்கால கட்டிடங்கள் பாதுகாப்பு, பாதுகாப்பு துறையில் கட்டுமான வடிவமைப்பு, ரயில்வே துறையிலும், இதர பொது துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. நகர கட்டமைப்பு துறையில் வேலை வாய்ப்பு பெறலாம். நகர வளர்ச்சி பிரிவு, தனியார் நிறுவனங்களும், பெரிய அளவில் உருவாகி இருக்கின்றன.
ஆர்கிடெக்சர் படிப்பை முடிப்பவர்கள், ஆரம்ப நிலையில் கட்டுமான நிறுவனங்களிலும், வடிவமைப்பு நிறுவனங்களிலும் வேலை கிடைக்கும். இங்கு வேலைக்குச் சேர்ந்து உத்திகளை கற்றுக் கொண்டு, தனியே ஆலோசனை நிறுவனங்களையும், கட்டுமான நிறுவனத்தையும் தொடங்கலாம்.தனியே வடிவமைப்பை உருவாக்கி தருபவராகவும் இருக்கலாம் அல்லது அரசு பணிகளுக்கு வடிவமைப்பை உருவாக்கி தரலாம், ஆசிரியர் பணிக்கும் பெரிய அளவில் தேவை இருக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொது பணி துறைகளில் இவர்களுக்கு வேலை வாய்ப்பு பெறலாம். மேலும், கட்டுமான நிறுவனங்களிலும் வாய்ப்பை பெறலாம். மேலும், ஆலோசகராகவும், கட்டுமான தொழில் முனைவோராகவும் தனியே வியாபாரம் செய்யலாம்.

மக்களின் முக்கியமான கனவுகளில் ஒன்று சொந்தமாக வீடு கட்டுவது. தற்போது இந்த கனவை பலரும் நிறைவேற்றி வருகிறார்கள். மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிகவளாகங்கள், தெருக்கள், அலுவலக மற்றும் தொழில் துறை கட்டிடங்கள், விற்பனை மையங்கள், மருத்துவமனைகள், உணவகங்கள், விமான நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற அனைத்துக்கும் கட்டிடகலைக்கும், வடிவமைப்புக்கும் முக்கியத்துவம் தர ஆரம்பித்திருக்கிறார்கள். ஏற்கனவே உள்ள கட்டிடத்தை மாற்றி அமைக்கவும், புதுமைப்படுத்தவும் செய்கிறார்கள். இதனால் கட்டிட கலைஞர்களுக்கு ஒய்வு இல்லாமல் பணிகள் இருந்த வண்ணம் இருக்கின்றன. கூடவே, கட்டுமான துறையின் வேகமாக வளர்ச்சியால், கட்டிடகலையும் அதன் வடிவமைப்பும் வளர்ச்சி பெற ஆரம்பித்திருக்கிறது. மேலும், நாட்டின் உள்கட்டமைப்பு பணிகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அத்தகைய உள்கட்டமைப்பு பணிகளிலும் கட்டுமான கலைஞர்களின் பங்களிப்பும் அதிகரித்து வருகிறது.

அரசு துறையிலும் வேலை வாய்ப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.  இளநிலை கட்டிட வடிவமைப்பு படிப்பை முடித்தவர்கள்,  பல்வேறு துறைகளில் இளநிலை கட்டிட வடிவமைப்பாளர் பதவி பெறலாம். அதன் பின்பு பெரிய அளவில் வளர்ச்சி பெற முடியும். குறிப்பாக, அரசு துறையில் பொதுபணித்துறை, ஆர்கியாலஜி துறை, பாதுகாப்பு துறை, ரயில்வே துறை, தபால் மற்றும் தந்தி துறை, பொதுத்துறை நிறுவனங்கள், தேசிய கட்டுமான அமைப்பு, நகர திட்ட அமைப்பு, வீடு மற்றும் நகர மேலாண்மை நிறுவனம், தேசிய கட்டுமான கட்டிட நிறுவனம் என பல அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெறலாம். இதைத்தவிர, மாநில அளவிலும் பல வித வேலை வாய்ப்புகள் இருக்கின்றன.

தற்போது இந்த துறை வளரும் துறை என்பதால் பல கல்லூரிகளில் புதியதாக படிப்பு தொடங்கியும், தொடங்கவும் தயாராக இருக்கிறார்கள். அங்கு எல்லாம் விரிவுரையாளர் பணிக்கு செல்லவும் செய்யலாம். இதன் மூலம் தன் கற்றுக் கொண்டதை கொண்டு பல இளம் ஆர்கிடெக்குகளை உருவாக்க முடியும். பிற்கால சிற்பிகளை உருவாக்குவார்கள்.மேலும் வடிவமைப்பு கலையை பற்றி ஊடகங்களிடையே பேசுவதற்கும், எழுதுவதற்கும் கூட ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

மாணவர்களுக்கு படைப்பாற்றல் திறனோடு, திட்டமிடல் திறனோடும் இருப்பது அவசியம். மேலும் வரைகலையில் வடிவமைக்கும் திறனும், ஒரு வடிவமைப்பு திட்டத்தை, முன்னரே எப்படி வடிவம் வரும் என்பதை கணிக்கும் திறனும் இருக்க வேண்டும். ஏராளமான சிக்கலான வடிவமைப்புகளை உள்வாங்கி கொண்டு, புதிய வடிவமைப்பு உருவாக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் கட்டுமானத்திலும், வடிவமைப்பிலும் அனைத்து டெக்னிக்கல் விஷயங்களையும்  ஆர்வத்தோடு கற்றுத்தெரிந்துக் கொள்ளக்கூடிய ஆர்வம் இருக்க வேண்டும். , சுற்றுச்சுழல் குறித்த அறிவு இருப்பதும் அவசியம். குறிப்பாக கற்பனை சக்தி, வரையும் திறன் போன்றவை அவசியம்.

http://www.sikams.com/component/content/article/8622.html

Friday, December 16, 2016

தமிழர் - கலை - பண்பாடு

இந்த தலைப்பில் மூன்று விடயங்கள் உள்ளடங்கியுள்ளன. இவற்றில் எல்லா இனங்களுக்கும் உள்ள இரண்டு பொதுவான விடயங்களான கலை மற்றும் பண்பாடு ஆனது மூன்றாவது விடயமான தமிழர் என்ற இனம் என்பதோடு மட்டும் இணைத்துப் பார்க்கப்படுகின்றது. இங்கு சொல்லப்படுகின்ற மூன்று விடயங்களையும் தனித்தனியே பார்க்க வேண்டும். அதாவது தமிழர் -கலை-பண்பாடு என்பவற்றை தனித்தியான ஆராய்ந்தால் மடடுமே முழுவதையும் இணைத்துப்பார்க்க முடியும்.

முதலில் தமிழர் என்பதை எடுத்துக்கொண்டால் இங்கு எழும் முக்கிய பிரச்சனை தமிழர்களை எவ்வாறு வரையறுப்பது. தமிழ் மொழி பேசுபவர்கள் அனைவரும் தமிழர்களா? அல்லது எந்த மொழி பேசினாலும் அம்மக்களின் மரபணு பண்புகளில் இருந்து தமிழர்களை வரையறுப்பதா?
அல்லது வரலாற்று ரீதியாக தமிழர்களாக இருந்து பல்வேறு நாடுகளில் தமிழ் மொழி தெரியாது வாழும் தமிழ் வம்சாவளியில் வந்தவர்களை குறிப்பிடுவதா? மனிதர்கள் தோன்றிய காலம் முதல் தமிழ் என்ற மொழி பேசும் இனம் தோன்றியது என்று வைத்துக்கொண்டால் ஆதியில் பிறந்த தமிழர்கள் எல்லோரும் இன்று அப்படியோ இருக்கிறார்களாபூமியின் சுழற்சி அதனால் ஏற்பட்ட காலநிலை மாற்றம், இடப்பெயர்வு, அன்னியராட்சி போன்ற பல்வேறு காரணங்களால் இன்று குறித்த இனம் மடடுமல்ல அநேகமான மனித இனங்கள் எல்லாம் இந்த உலகம் மட்டுமல்ல பிரபஞ்சம் முழுவதுமே இருப்பார்கள் என்பதை சாதாரண அறிவு படைத்த எவருமே ஏற்றுக்கொள்வார்கள். அப்படியாயின் தமிழர்கள்  என்று யாரைக்குறிப்பது?
தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களின் மூதாதையர்கள் ஆபிரிக்ககண்டத்தில்  இருந்து வந்தவர்கள் என்று அண்மைக்கால மரபணுப் பரிசோதனைகள் சொல்வதாக கூறப்படுகின்றது. இதே வேளை இலங்கையில் பல்வேறு அரசியல் இராணுவத் தேவைகளுக்காக பல்வேறு இன மொழி பேசியவர்கள் தமிழ் மொழியைப் பேசி, தமிழ் பேசியவர்களை திருமணம் செய்தும், தமிழர் பண்பாடுகள் என்று கூறப்படுபவைகளைப் பின்பற்றியும் வாழ்கின்றமையை அவதானிக்கலாம். இவ்வாறான போக்கு கடந்த 500 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது இன்று யார் தமிழர்கள் என்பது வரையறுக்க முடியாத சூழ்நிலையே காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் கலை என்பதை எடுத்துக்கொண்டால்,
கலைகளின் தோற்றத்தைப் பார்க்கும் போது வேட்டையாடிய மனிதன் தன்னுடைய வேட்டை அனுபவத்தை ஏனையவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதற்காக சித்திரங்களை வரைந்ததாகவும், ஓய்வு சேரங்களில் ஆடல் பாடல்களில் ஈடுபட்டதாகவும் வரலாறு சொல்கின்றது. அந்த மனித இனம் தமிழ் பேசியதாக வைத்துக்கொண்டால்இன்று தமிழ் பேசும் அல்லது தமிழர் என்று சொல்லப்படும் ஒருவர் ஏற்பட்ட கால மாற்றத்தால் ஒவியத்துறையில் அல்லது ஏனைய கலைத்துறையில் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களை, சிந்தனைகளை உள்வாங்கி தன்னுடைய படைப்புக்களை உருவாக்குவதை தமிழ்நாட்டிலேயே காணக்கூடியதாக உள்ளது. இதற்கு மேலாக இன்று ஐரோப்பிய சூழலில் வாழும் தமிழ் பேசும் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய படைப்புக்களை ஒரு கலைப்படைப்பு என்ற அடைப்படையிலேயே நோக்கின்றார். ஆதனை எந்தச் சந்தர்பத்திலும் தமிழ் அல்லது தமிழருடைய படைப்பு  என்று பார்ப்பதில்லை. இன்று உலகில் ஏற்பட்டிருக்கும் சிந்தனை மாற்றம் அநேகமாக எல்லாவிதமான கலைப்படைப்புகளையும் கலை என்ற கோணத்தில் மட்டும் பார்க்கும் போக்கு காணப்படுகின்றது. உலகம் தகவல் தொழில்நுட்ப புரட்சியை உள்வாங்கிய பின்னர் மனித மனங்களில் ஏற்பட்ட சிந்தனை மாற்றம் சில மனிதக்குழுக்களுக்குரிய கலைகளை பாரம்பரிய அல்லது நாட்டுப்புற கலைவடிவம் என்ற வகையில் வகைப்படுத்தி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் தமிழர்களின் கலை என்று கூறி நாம் பாதுகாக்கும் ஒன்றை தொடர்ந்து பேணிப்பாதுகாப்பது ஒரு கலைஞனின் ஆற்றலை அல்லது வளர்ச்சியைமட்டுப்படுத்துவது போன்ற செயற்பாடு என்ற எண்ணமே தோன்றுகின்றது.

அடுத்த விடயம் பண்பாடு
ஒரு விலங்கின் நடத்தை என்பது குறித்த விலங்கு வாழும் சூழ்நிலை, அந்த சூழலின் தரைத்தோற்றம், காலநிலை என்பவற்றின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டது. உதாரணமாக இந்தியா இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் நிலவும் காலநிலைக்கு குறித்த மக்களின் உணவுப்பழக்கம் மற்றும் ஆடை அலங்காரங்கள் தோன்றின, அவை தொடர்நதும் பின்பற்றப்பட்டன. காலப்போக்கில் உலக வர்த்தகம் விரிவடைய பிறநாடுகள் மேற்கொண்ட ஆக்கிரமிப்புக்கள் மக்களின் உணவுப்பழக்கம், ஆடை அலங்காரங்களில் மாற்றத்தை ஏற்படுத்தின. இக்காலப்பகுதியில் மக்களின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மக்களின் நீண்ட காலப்பழக்க வழங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தின. இவ்வாறான மாற்றங்கள் தமிழர் என்று  சொல்லப்படும் மக்களின் வாழ்வில் கடந்த 200 வருடங்களில் பாரிய மாற்றம் ஏற்பட்டன. பாரிய அளவில் ஏற்படுத்தப்பட்ட கட்டாயக்குடிஏற்றங்கள், பாதுகாப்பிற்கான இடப்பெயர்வுகள், தொழில் ரீதியான இடப்பெயர்வுகள் எல்லாம் மக்களின் பழக்க வழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி தொடர்ச்சியாக பண்பாட்டில் மாற்ங்களை ஏற்படுத்தின. முன்னைய தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட தமிழ் மக்களின் பண்பாடு என்பது இன்றைய தமிழ் மக்களின் பண்பாடு எனப்படுவதோடு பாரிய வேறுபாடுகளை காட்டிநிற்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் எழுகின்ற முக்கிய கேள்வி என்னவெனில்  இன்றைய தொழில்நுட்பம், தொடர்பாடல்கள் இல்லாத ஒரு காலகட்டத்தில் அதாவது இன்றைய காலத்திற்கு முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் தோன்றிய ஒரு வாழ்க்கை முறையை ஒரு இனத்தின் அடையாளம் அல்லது பாரம்பரியம் என்ற பெயரில் அதனைப்பாதுகாக்க வேண்டுமா? இன்றைக்கு 10 வருடங்களிற்கு முன்னர் வந்த சாதாரண கைத்தொலைபேசியை எந்த மனித இனத்தைச் சேர்ந்த ஒருவருமே உபயோகப்படுத்துவதற்கு ஆர்வம் காட்டுவது கிடையாது. ஏனெனில் அவ்வாறான கைத்தொலைபேசிகள் இன்று பயன்பாட்டிற்கு தேவையான வசதிகளை கொண்டிருக்கவில்லை என்பதே காரணம்.

இனி தமிழர் கலை பண்பாடு என்ற விடயத்தை முழுமையாக நோக்கினால் தமிழ் பேசுக்கின்ற ஒரு மக்கள் கூட்டம் தங்களுடைய கலை பண்பாடு என்று உறுதியாக வரையறுக்க முடியாத சில வரையறைகளுக்குள் மட்டும் தங்களை மட்டுப்படுத்திக்கொள்ள வேண்டுமா? என்ற கேள்வி எழுகின்றது. இன்று எம்மத்தயில் காணப்படுகின்ற சட்டங்கள் சாதாரண மக்களுக்கு மட்டும் பிரயோகிக்கப்படுகின்ற அதேவேளை குறித்த சட்டத்தை அமுல்படுத்த வேண்டியவர்கள் குறித்த சட்டங்களை மீறி செயலாற்றுவது போல் தமிழ் பேசும் மக்களில்ஒரு சிலர் மட்டும் நிகழும் சமூக மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தாங்கள் சிறுவயதில் இருந்து புகுத்தப்பட்ட சில கலை பண்பாடு அதனைக் காப்பாற்றவும், பேணிப்பாதுகாக்கவும் முற்பட்டு அதனை முழுமையாக செய்யாது மனதளவில் துன்பத்திற்கு உள்ளாவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.


தமிழர்கள் எனச்சொல்லப்பபடும் மக்கள் கூட்டம் உலகில் மாற்றங்கள் ஏற்படுவதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து ஏனைய தங்களை இந்த பூமியில் தக்க வைக்கவேண்டும் அதற்கான செயற்பாடுகள் அவசியம். துமிழர் கலை உயர்ந்தது, பண்பாடு சிறந்தது என நம்புவர்கள் அதனைப் பின்பற்றி வாழ்ந்து உயர்ந்து காட்டவேண்டும். இது இவ்வாறு இருக்க யாதும் ஊரே யாவரும் கேளீர் அன்பே சிவம் போன்ற தமிழ்ச் சொற்கள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.