Monday, January 18, 2016

வெளிப்பக்கமா ? உட்பக்கமா ? நீங்களே தீர்மானியுங்கள்...



அழகான அமைதியான இடத்தில் இருந்து சாப்பிட, புத்தகம் வாசிக்க, சிந்திக்க, பிள்ளைகளுடன் குடும்பமாக இருந்து கதைக்க, அன்புக்குரியவர்களுடன் இருந்து விவாதிக்க  ஒரு கிடைத்தால் யார்தான் வேணடாம் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இவ்வாறான சந்தர்பங்களும், இடங்களும் கிடைக்காது தங்களின் இன்பமான பொழுதுகளை தேவையில்லாத இடங்களில் இருந்து வீணாக்கி விடுகின்றனர். இறந்த காலம் இறந்தாக இருக்க, எதிர்காலத்தை வளமாக்க நிகழ்காலத்தில் செயலாற்றுவதே புத்திசாலித்தனம்.

வீட்டின், பாடசாலையின், அலுவலகத்தின், அங்காடிகளின் உட்பகுதிகளை அழகாக்குவது  பற்றி எப்போதாவது எண்ணியிருந்தீர்களா?  அழகாக்க சில யோசனைகள்......

ஒன்று:  வடிவமைத்தல் என்பது ஒரு கலைத்துவமான செயற்பாடு. அந்தவகையில் ஒரு கலைப்படைப்பை உருவாக்கும் போது அதற்கு ஒரு பிரதான கருப்பொருள் இருக்க வேண்டும். கருப்பொருள் இல்லாமல்  கலைப்படைப்பு ஒன்றை  உருவாக்குவதும், விளங்கிக்கொள்வதும் கடினம். உதாரணமாக  காதலை வெளிப்படுத்தம் பாடல் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள் இதில் காதல் என்பது பிரதான கருப்பொருள், அதில் கவிதை வரிகள் காதலைச் சொல்லவேண்டும், அதற்கான பொருத்தமான சொற்கள் சரியான வகையில் இணைக்கவேண்டும். பொருத்தமான  குரலில்  இனிமையான  இசையுடன் பாடவேண்டும். இவ்வாறு ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடலுக்கு சரியான வகையில் காட்சி அமைக்க வேண்டும். ஒரு வெற்றி பெற்ற காதல் பாடலில் மேற்கூறியவை எல்லாம் சரியாக அமைந்திருக்கும். வடிமைக்கும் போதும் சரியான கருப்பொருளைத் தெரிவு செய்து அதற்கு ஏற்றால் போல் வடிவமைப்பு தத்துவங்களையும், வடிவமைக்கும் பதிகளையும் பயன்படுத்துவது அழகான உள்ளக வடிவமைப்பை தரும்.

இரண்டு: செயற்பாடு - குறித்த இடத்தில் இடம்பெறும் செயற்பாடுகள். வீட்டினை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு பகுதியிலும் வௌ;வேறு விதமான செயற்பாடுகள் நடைபெறும். உதாரணமாக சமையல் அறையை எடுத்துக்கொண்டால், சமையல் செயற்பாடுட்டினை சிறப்பாக செய்வதற்கு ஏற்றவகையில் அதற்குள் இருக்கும் பொருட்கள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். வேலைகளை செய்வதற்கு போதிய வெளிச்சம், காற்று இருக்க வேண்டும். தரை மற்றும் சுவர்களின் தன்மை இலகுவில் சுத்தாமாக வைத்திருக்க கூடியவகையில் இருக்க வேண்டும் அதே வேளையில் பொருத்தமான வர்ணம் என்பன குறித்த இடத்தின் செயற்பாட்டிற்கு ஏற்ற வகையிலேயே அமையும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அலுவலகத்கின் உட்புறம் தொழிலாளர்கள் சிறப்பாக வேலை செய்வதற்கும், கோவில் உட்புறம் வடிவமைக்கும் போது மனதிற்கு ஆறுதல் அளிப்பதாகவும், இறை சிந்தனையை மேம்படுத்துவதாகவும், பாடசாலையின் உட்புறம் என்பது மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை ஊக்கப்படுத்துவற்கும் ஏற்றவகையில் இருக்கவேண்டும்.  அழகாக்ககுவதற்கு செய்யும் செயல்கள் குறித்த இடத்தின் பிரதான செயற்பாட்டிற்கு ஊறு விளைவிப்பதாக இருக்க இருக்ககூடாது.

மூன்று:  ஒற்றுமையும் ஒத்திசைவும் - வடிவமைப்புசெய்ய வேண்டிய  இடத்தில் உள்ள பொருட்கள் மற்றும் யன்னல் கதவு தரை, கூரை போன்றவற்றில் காணப்படும் கோடு, வடிவம், அலங்காரம், மேற்பரப்பின் தன்மை, வர்ணம் போன்ற வடிவமைப்பின் மூலங்களுக்கு இடையிலான ஒற்றுமையும், ஒத்திசைவும். அதாவது அலுவலகம் ஒன்றின் வரவேற்பறையை எடுத்துக்கொள்ளுங்கள், வலிமையான கண்ணாடியிலான கதவு, அகலமான அலுமீனியத்தில் கொழுவப்பட்ட கண்ணாடி யன்னல்கள், யன்னலுக்கு எதிர்ப்பக்க சுவருக்கு  குருத்துப்பச்சைந pற  வர்ணம் பூசிய சுவர் இரண்டு பக்கத்திற்கு, அவ்வாறான இடத்தில் மரத்தில் செய்யப்பட்ட ஒரு கதிரை, அருகில் இரும்பிலான இன்னொரு கதிரை, அதற்குப்பக்கத்தில் பிளாஸ்ரிக் மேசை பருத்தி துணியிலான மேசை விரிப்புடன், அதற்கு அருகில் செப்பிலான பெரிய குத்து விளக்கு, நிலத்திற்கு பிளாஸ்ரிக் விரிப்பு, தலைக்கு மேல் ரியூப் மின்விளக்கு அருகில் ; மரத் தோற்றம் தரக்கூடிய ஸ்ரிக்கர் பதிக்கப்பட்ட ஒட்டுப்பலகையால் செய்யப்பட்ட வரவேற்பு மேசை யும் அதனோடு சேர்ந்த சூழலும் கதிரையும் இருக்கின்ற  வரவேற்பு அறையில் ஒருவரைச் சந்திப்பதற்காக அரை மணிநேரம் காத்திருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு வயிற்றைக் குமட்டி வாந்தி வந்தால் நான் பொறுப்பல்ல. வாந்தி வந்தமைக்கு காரணம் வேறு ஒன்றுமல்ல குறித்த இடத்தில் உள்ள பொருட்களின்  தன்மைகளுக்கு இடையிலான முரண்பாடு, மேற்பரப்புகளின் மேல் ஒளி பட்டு தெறிப்பதனால்  உருவாகும் ஒழுங்கீனங்கள் ஆகும். ஆழகான வரவேற்பு அறை ஆக்குறைந்தது படத்தில் உள்ளவாறு இருந்தால் அலுவலகத்திற்கு வந்த ஒருவர் தான் வந்த காரியம் ஆற்றும் வரைக்கும் எரிச்சல் அடையாமல் காத்துக்கொண்டு இருக்கலாம்.

நான்காவது: முன்னிலைப்படுத்தல் - குறித்த உள்ளக அமைப்பில் முன்னிலைப்படுத்தப்படும் விடயம். சாதரணமாக மனிதக்கண்கள் எவ்வாறு அசைகின்றன என்பதைப்புரிந்துகொண்டு செயலாற்றுதல். உதாரணமாக உங்கள் அங்காடிக்கு ஒருவர் வருவதாக வைத்துக்கொள்வோம். வாசலுக்கு எதிரில் ஒரு இடம் இருக்கும் அதில் என்னபொருளை வைக்கப்போகின்றீர்கள், அதனை எவ்வாறு வைக்கப்போகின்றீர்கள் என்பது முக்கியமானது. ஏனெனில் உங்கள் அங்காடியில் குறித்தஇடம் ஒரு முக்கிய பார்வைப்புள்ளியாகும். குறித்த வாடிக்கையாளர் அங்கு பணியாற்றும் பணியாளரைத் தே ப்பார்ப்பார் அப்போது வாடிக்கையாளரின் கண்கள் அசையும் அந்த வேளையில் அவருடைய கண்ணில் படவேண்டிய பொருட்கள் என்ன என்பதை நீங்கள் தீர்மானித்து ஒழுங்குபடுத்தினால் குறித்த வியாபாரத்தில் நீங்கள் உள்ளகவடிவமைப்பினை பயன்படுத்தி வெற்றி பெற்றவர். இதே போல் அலுவலகம், வரவேற்பறை , படுக்கை அறையில் கூட இந்த விதியைப் பிரயோகித்துப்பார்க்கலாம்.

ஐந்தாவது: பார்வைச்சமநிலை. மீண்டும் கண் பற்றிய விடயம். சகலவிதமான முயற்சியும் எடுத்து உள்ளக அமைப்பில்  மாற்றத்தை ஏற்படுத்திய பின்னர் பார்க்கும் கண்களுக்கு பார்வையில் சமநிலை ஏற்படாத பட்சத்தில் குறித்த வடிவமைப்பு முயற்சி பயன்அற்ற ஒன்றே. பௌதீக அழகு எல்லாமே கண்களால் தீர்மாணிக்கப்படுவதால் பார்வைச் சமநிலை வடிவமைப்பில் முக்கியமான ஒன்றாகும். இதனை அடைவதற்கு வடிவமைப்செய்பவர் தன்னுடைய சொந்த முயற்சியால் சமநிலை பற்றிய உணர்வை வளர்த்துக்கொண்டாலே செய்யும் வேலையில் பார்வைச்சமநிலையயை அடைய முடியும்.

ஆறாவது:வடிவமைப்பு செய்யும் இடத்தின் கட்டடம் சார்ந்த சேவைகள் பற்றியது. மின்சாரம், தண்ணீர், மற்றும் ஒலி போன்றவற்றுக்காக செய்யப்படும் மின்சாரக்கம்பி, தண்ணீர்க்குழாய் போன்ற பொருட்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இவை பழுது ஏற்பட்டால் இலகுவில் திருத்தி அமைக்ககூடிய வகையிலும், இடத்தின் அழகை மெருகூட்டும் வகையில் அல்லது அழகைப்பாதிக்காத வகையில் செய்யப்படவேண்டும். இதற்கான எந்த விதியும் இல்லை, எப்படி அமைக்கவேண்டும் என்பது பற்றிய தீர்மானமும் வடிவமைப்பாளருடையதாகும்.  குறித்த இடத்தின் பாதுகாப்பு என்பது மிக முக்கியமானதாகும்.

உள்ளக வடிவமைப்புத் துறை பற்றிக்கற்கும் ஒருவர் மேற்குறித்த விடயங்கள் பற்றியும் வேறு துறைசார் நுட்பங்களையும் கற்க முடியும். அதேNவுளை ஆர்வமுள்ள ஒருவர் இணையத்தளங்களில் இது பற்றிய பல புத்தகங்கள் ஆங்கில மொழியில் உண்டு அவற்றை வாசித்தும் துறைசார் அறிவை வளர்த்துக்கொள்ளமுடியும்.

இனித் தலையங்கத்துக்குவருவோம் அது என்ன வெளிப்பக்கமா ? உட்பக்கமா ? நீங்களே தீர்மானியுங்கள்... என்று எழுதி இருக்கு என்று யோசிக்கிறிர்களா? யாழ்ப்பாணத்தில் அநேகர் வீடு மற்றும் இதர கட்டடங்களை அமைக்கும் போது மற்றவர்களுக்கு தங்களுடைய செல்வச்செழிப்பைக்காட்டுவதற்காக பல இலட்சங்களை செலவு செய்வார்கள். அவ்வாறு செலவு செய்யும் போது ஒப்பந்தகாரர்கள், வியாபாரிகளின் தகவல்கள் மற்றும் சந்தைப்படுத்தல்களுக்கு மயங்கி எது பொருத்தம் எது பொருத்தமில்லை  என்பதைப் பார்க்காதுஒன்றுக்கொன்று பொருத்தமில்லாத கட்டுமாணப்பொருட்கள், பொருத்தமில்லாத வர்ணங்கள், பொருத்தமில்லாத அளவுபிரமாணங்கள் என முடிந்தளவு எங்கெல்லாம் பொருத்தமில்லாத வேலைகள் செய்யமுடியுமோ செய்து கொள்வார்கள். இது தவிர வெளியில் காட்டிய படத்திற்கு எதிர் வளமாக உட்பக்கம் குறைந்தளவு கவனமே செலுத்தியிருப்பார்கள். செலவு செய்து கட்டடிய கட்டத்தினை வெளியில் பார்ப்பவர்கள் பார்த்துவிட்டு மட்டும் போக கட்டியவர் வீட்டுக்குள்ளே எதுவும் இ ல்லாது இருப்பர். இது தேவைதானா நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

கு.பதீதரன்
கட்டடக்கஞைர்

No comments:

Post a Comment